பாஜகவுடன் அதிமுக கூட்டணியின் பலன்: ஜெயலலிதா பிறந்த நாளுக்கு நினைவு நாணயம்?

முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா | கோப்புப்படம்

முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா | கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: தமிழகத்​தில் பல முன்​னாள் முதல்​வர்​களுக்கு நினைவு நாண​யங்​கள் வெளி​யாகி உள்​ளன. காம​ராஜர், அண்​ணா, எம்​.ஜி.ஆர். ஆகியோரை தொடர்ந்து கடைசி​யாக கடந்த 2024-ல் கலைஞர் கருணாநிதி நூற்​றாண்டு நினைவு நாண​யம் வெளி​யிடப்​பட்​டது.

இதற்கு முன்​ன​தாகவே, முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தாவுக்​கும் நினைவு நாண​யம் வெளி​யிட வேண்​டும் என்று அதி​முக சார்​பில் எடப்​பாடி பழனி​சாமி மனு அளித்​திருந்​தார். அதி​முக​வின் இந்த கோரிக்கை மத்​திய நிதி அமைச்​சகத்​தில் இன்று வரை நிலு​வை​யில் உள்​ளது. ஊழல் வழக்​கில் ஜெயலலிதா தண்​டனை பெற்​றவர் என்​பது இதற்கு காரண​மாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் மத்​தி​யில் ஆட்​சிக்கு தலைமை வகிக்​கும் பாஜக​வுடன் அதி​முக கூட்​டணி வைத்​துள்​ளதன் பலனாக அதி​முக​வின் கோரிக்கை தற்​போது ஏற்​கப்​படும் வாய்ப்​பு​கள் உள்​ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் பாஜக தேசிய நிர்​வாகி​கள் வட்​டாரங்கள் கூறுகை​யில், “முன்​னாள் முதல்​வர்​களில் மு.கருணாநி​தி​யின் நினைவு நாண​யம் வெளி​யான நிலை​யில் ஜெயலலி​தாவுக்​கானது நிலு​வை​யில் இருப்​பது அதி​முக​வுக்கு அரசி​யல் நெருக்​கடியை அளித்​துள்​ளது. சமீபத்​தில் சென்னை வந்த தமிழக பாஜக பொறுப்​பாளர், அமைச்​சர் பியூஷ் கோயலிட​மும் நினைவு நாணய கோரிக்கை வலி​யுறுத்​தப்​பட்​டது.

இதனால் தமிழ்​நாடு சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக​வுக்கு அரசி​யல் லாபம் கிடைக்​கும் என்ற எதிர்​பார்ப்பு அக்​கட்​சிக்கு உள்​ளது. வரும் பிப்​ர​வரி 24-ல் ஜெயலலிதா பிறந்த நாளை​யொட்டி நினைவு நாண​யம் வெளி​யிடப்பட வாய்ப்​புள்​ளது” என்று தெரி​வித்​தன.

இந்​தி​யா​வில் நினைவு நாண​யம் வெளி​யிடும் முறை கடந்த 1964-ல் தொடங்​கியது. நாட்​டின் முதல் பிரதமர் நேரு​வுக்​காக முதல் நினைவு நாண​யம் வெளி​யானது. இதைத் தொடர்ந்து நினைவு நாண​யங்​கள் முக்​கி​யத் தலை​வர்​களுக்கு மட்​டுமின்றி முக்​கிய நிகழ்​வு​களுக்​கும் வெளி​யானது. இவற்​றில் சில நாண​யங்​கள் மக்​களிடையே புழக்​கத்​தில் விடப்​பட்​டுள்​ளன. சில நாண​யங்​கள் தனிப்​பட்ட பயன்​பாட்​டுக்​கான​தாக இருந்​தன.

நினைவு நாண​யம் தொடர்​பான கோரிக்​கைகளை மத்​திய நிதி​யமைச்​சகம் பரிசீலித்து இந்​திய ரிசர்வ் வங்கி மூல​மாக வெளி​யிடப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா |&nbsp;கோப்புப்படம்</p></div>
ராஜஸ்தானில் ஒரு எருமைக்கு உரிமை கோரிய 2 பேர்: மருத்துவ அறிக்கை மூலம் சர்ச்சைக்கு தீர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in