

இம்பால்: மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டம் தபவ் குக்கி கிராமத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மர்ம நபர்கள் ஒரு வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிது. இதைத் தொடர்ந்து, அருகில் உள்ள சேனாபதி மாவட்டத்தில் உள்ள நாகா தபவ் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பல வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இதையடுத்து, சிஆர்பிஎப் வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மோதலை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும் காலை 9.20 மணியளவில் தபவ் நாகா பகுதியில் மோதல் தீவிரமடைந்தது. குறிப்பாக இருகுழுக்களைச் சேர்ந்தவர்கள் பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய சிஆர்பிஎப் வீரர் ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.