ம.பி.யில் எஸ்.சி. எஸ்.டி. பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: காங். எம்எல்ஏவை நீக்க ராகுலுக்கு கோரிக்கை

காங். எம்எல்ஏ பூல் சிங் பரை​யா

காங். எம்எல்ஏ பூல் சிங் பரை​யா

Updated on
1 min read

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் தாட்​டியா மாவட்​டம் பந்​தர் சட்​டப் பேர​வைத் தொகுதி எம்​எல்​ஏ​வாக இருப்​பவர் பூல் சிங் பரை​யா.

இவர் அண்​மை​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்டு பேசும்​போது, “நமது நாட்​டில் பாலியல் வன்​கொடுமை​யால் அதிக அளவில் பாதிக்​கப்​படு​பவர்​கள் யார்? பட்​டியல் சாதி​யினர், பழங்​குடி​யினர் மற்​றும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர்​தான். ஒரு​வன் எந்த மனநிலை​யில் இருந்​தா​லும் சரி, அவன் ஒரு அழகான பெண்ணை பார்த்​தால், அவனது மனம் திசை திரும்​பும். அதோடு அந்த பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்ய தூண்​டி​விடும். இது​தான் பாலியல் வன்​கொடுமைக்​கான வரையறை​யாக உள்​ளது” என்று பேசி​னார்.

இவரது கருத்து பெரும் சர்ச்​சையை எழுப்பி உள்​ளது. அவர் பேசிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி​யுள்​ளது. இந்​நிலை​யில் ம.பி.யின் இந்​தூருக்கு நேற்று ராகுல் காந்தி வருகை தந்​தார். காங்​கிரஸ் எம்​எல்​ஏ​வின் சர்ச்​சை​யான கருத்​துகள் குறித்து ராகுலிடம் அப்​போது தெரிவிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து மாநில பாஜக பொறுப்​பாளர் ஆசிஷ் உஷா அக்​ர​வால் கூறும்​போது, “காங்​கிரஸ் எம்​எல்ஏ பரை​யா​வின் சர்ச்சை கருத்​துக்கு பலர் கண்​டனம் தெரி​வித்து வரு​கின்​றனர். இந்த நேரத்​தில் ம.பி.க்கு ராகுல் காந்தி வந்​துள்​ளார். தங்​களது கட்​சி​ எம்​எல்ஏ இவ்​வாறு பேசி​யதற்​காக அவரை கட்​சியி​லிருந்து ராகுல் நீக்​க வேண்​டும்” என்​றார்.

ம.பி. முதல்​வர் மோகன் யாதவ் கூறும்​போது, “சமூக அக்​கறை கொண்​ட​வர் ராகுல் காந்​தி. எனவே காங்​கிரஸ் எம்​எல்​ஏ-வை அவர் கட்​சியி​லிருந்து நீக்​கி​விடு​வார்​ என நான்​ எதிர்​பார்க்​கிறேன்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>காங். எம்எல்ஏ பூல் சிங் பரை​யா</p></div>
திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம்: லஞ்சம் வாங்கிய அதிகாரியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in