இந்தியா
கொலை வழக்கில் பாஜக எம்எல்ஏ-க்கு நிபந்தனை ஜாமீன்
பெங்களூரு: பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் பிரபல ரவுடி சிவ பிரகாஷ் (40) கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கிருஷ்ணராஜபுரம் பாஜக எம்எல்ஏ பைரத்தி பசவராஜை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஜாமீன் கோரி, அவர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ் கஜனன் பட், பைரத்தி பசவராஜுக்கு ரூ.2 லட்சம் பிணையத் தொகையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். வழக்கு தொடர்புடையவர்களை அச்சுறுத்தவோ, சாட்சியங்களை கலைக்கவோ கூடாது. மாதந்தோறும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
