காதலை முறித்த இளம்பெண்ணை அலுவலகத்திலேயே கொலை செய்த சக ஊழியர்

காதலை முறித்த இளம்பெண்ணை அலுவலகத்திலேயே கொலை செய்த சக ஊழியர்
Updated on
1 min read

மொகாலி: பஞ்​சாபின் பட்​டி​யாலா பகு​தியை சேர்ந்​தவர் டிம்​பிள் (29). அவர் மொகாலி​யில் உள்ள சரக்கு போக்​கு​வரத்து நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​தார். அதே நிறு​வனத்​தில் பணி​யாற்​றிய ஹரிந்​தர் சிங் மானும் (34), டிம்​பிளும் 3 ஆண்​டு​கள் தீவிர​மாக காதலித்து வந்​தனர்.

சில மாதங்​களுக்கு முன்பு டிம்​பிள் காதலை முறித்​துக் கொண்​டார். இந்த சூழலில் நேற்று முன்​தினம் இரவு மொகாலி அலு​வல​கத்​தில் டிம்​பிள் பணி​யாற்​றிக் கொண்டிருந்​த​போது அறைக்​குள் ஹரிந்தர் சிங் திடீரென நுழைந்து மறைத்து வைத்​திருந்த கத்​தியை எடுத்து டிம்​பிளை சரமாரி​யாக குத்​தி​னார். 35 விநாடிகளில் 30 முறை கத்​திக் குத்து விழுந்​தது. சக ஊழியர்​கள் ஓடி வந்து ஹரிந்​தரை தடுக்க முயன்​றனர். ஆனால் அவர்​களை​யும் கத்​தி​யால் குத்​தி விடு​வ​தாக அவர் மிரட்​டி​னார்.

இறு​தி​யில் ஊழியர் ஒரு​வர், ஹரிந்​தரை மடக்​கிப் பிடித்​தார். படு​காயமடைந்த டிம்​பிள் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். ஆனால் அவர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

இதற்கிடையில், ஹரிந்​தர் தனது கழுத்​தில் கத்​தி​யால் குத்தி தற்​கொலைக்கு முயன்​றார். தற்​போது அவர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். இதுகுறித்து மொகாலி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.

காதலை முறித்த இளம்பெண்ணை அலுவலகத்திலேயே கொலை செய்த சக ஊழியர்
பதவியேற்ற இரண்டே நாளில் கர்நாடக மூத்த‌ அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in