கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்கிறது

கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்கிறது
Updated on
1 min read

புதுடெல்லி: கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்​பில் நேற்று முன்​தினம் நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி நடத்​தப்​பட்​டது. இந்த பேரணி தடுத்து நிறுத்​தப்​பட்​டது. அன்​றைய தினம் இரவு சிஜேபி ஆதர​வாளர்​கள் மீண்​டும் ஜந்​தர் மந்​தரில் குவிந்​தனர். நள்​ளிரவு முழு​வதும் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

பேரணி​யின்போது காயமடைந்த போராட்​டக்​காரர்​கள் டெல்லி ஆர்​எம்​எல் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு உள்​ளனர். அவர்​களை மத்​திய அமைச்​சர் ஜே.பி.நட்டா நேற்று சந்​தித்து ஆறுதல் கூறி​னார். காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, பிரியங்கா காந்தி, வேணுகோ​பால் உள்​ளிட்​டோரும் நேற்று ஆர்எம்​எல் மருத்து​வ​மனைக்கு சென்று காயமடைந்​தவர்​களை சந்தித்​துப் பேசினர்.

இதனிடையே சிஜேபி தலை​வர் அபிஜித் திப்கே டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறிய​தாவது: ஜந்​தர் மந்​தரில் எங்களது போராட்​டம் தொடர்​கிறது. மத்​திய கல்வி அமைச்​சர் தர்மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும். நீட் தேர்வு காரணமாக தற்​கொலை செய்த மாணவ, மாண​வியரின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.1 கோடி இழப்​பீடு வழங்க வேண்​டும். இந்த கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொடர்ந்து போராடு​வோம்.

மத்​திய அரசு எங்​களோடு பேச்​சு​வார்த்தை நடத்த விரும்​பி​னால் ஜந்​தர் மந்​தருக்கு வரலாம். நாங்​கள் நீண்ட போராட்​டத்​துக்கு தயாராக உள்​ளோம். எங்​கள் நியாய​மான கோரிக்​கைகள் நிறைவேறும் வரை போராடு​வோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். தேசி​ய​வாத காங்​கிரஸ் தலை​வர் சரத் பவார் நேற்று ஜந்​தர் மந்தருக்கு நேரில் சென்று போராட்​டக் குழு தலை​வர்​களை சந்தித்துப் பேசி​னார்.

நாடாளு​மன்ற பேரணி​யில் பங்​கேற்ற போராட்​டக்​காரர்​கள், மந்திர் மார்க் போலீஸ் நிலை​யத்​தில் உள்​ளனர். அவர்​களை விடுவிக்க ஆம் ஆத்மி தேசிய ஒருங்​கிணைப்​பாளர் அர்​விந்த் கேஜ்ரி​வால் வழக்​கறிஞர்​களு​டன் போலீஸ் நிலை​யத்​துக்கு சென்றார். ஆனால் பேரணி​யின்​போது போராட்​டக்​காரர்​கள் வன்முறை​யில் ஈடு​பட்​டதற்கு வலு​வான சாட்​சி​யங்​கள் உள்​ளன. அவர்களை விடுவிக்க முடி​யாது என்​று போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்கிறது
விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய நடைமுறை அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in