

புதுடெல்லி: இந்திய கடலோர காவல் படையினர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: குஜராத் அரபிக் கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஈரானிய படகு சோதனையிடப்பட்டது.
அதில் முறையான ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பிடிபட்டன. அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 கோடி. படகில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்படவிருந்தன என்பது குறித்தும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கடல் வழியாக நடைபெறும் கடத்தல் மற்றும் ஊடுருவல்களைத் தடுக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.