அருணாச்சலில் சீன ராணுவம் ஊடுருவவில்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்

அருணாச்சலில் சீன ராணுவம் ஊடுருவவில்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்​தில் சீன ராணுவம் 60 கி.மீ. தூரம் இந்​தி​யப் பகு​திக்​குள் ஊடுரு​விய​தாக வெளி​யான தகவல்களை, மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு மறுத்​துள்​ளார்.

மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறிய​தாவது: சீன ராணுவம் நமது கிராமத்​தைக் கைப்​பற்​றி​விட்​ட​தாக​வும், குறிப்​பாக 60 கி.மீ. தூரம் இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​விய​தாக தகவல் வெளி​யாகி உள்ளது. அப்​படி எது​வும் நடக்​க​வில்​லை. இது பொய்​யான தகவல். வங்​கதேசம் உள்​ளிட்ட வேறு இடங்​களில் எடுக்​கப்​பட்ட தொடர்​பில்​லாத புகைப்​படங்​களைப் பயன்​படுத்​தி, சீன ராணுவம் அருணாச்​சலப் பிரதேசத்​துக்​குள் ஊடுரு​வி​யுள்​ள​தாகக் கூறு​வதும் சரியல்ல.

இது​போன்ற தவறான தகவல்​கள் அங்கு பணி​யாற்​றும் நமது ராணுவ வீரர்​கள் மற்​றும் பாது​காப்​புப் படை​யினரின் மன உறுதியைக் குலைக்​கும். மேலும், நாட்​டில் குழப்​பத்​தை​யும் ஏற்படுத்​தும். அருணாச்​சலப் பிரதேசத்​தின் எல்​லை​யோர கிராமங்களில் வசிக்​கும் மக்​கள் எழுப்​பி​யுள்ள கவலைகள் நியாயமானவை.

அதே​நேரம், சீனப் படைகள் இந்​திய எல்​லைக்​குள் நுழைந்​த​தாக தவறான தகவல்​களைப் பரப்​புவதைத் தவிர்க்க வேண்​டும். எல்லை வரையறுக்​கப்​ப​டாத​தால், குறிப்​பிட்ட சில நிலப்​பகுதிகளுக்கு சீனா உரிமை கோரு​கிறது. எல்​லைப் பகு​தி​யில் இந்தியா பாது​காப்பு ஏற்​பாடு​களை வலுப்​படுத்​தி​யுள்​ளது. ராணுவம் மற்​றும் இந்​தோ-​திபெத் எல்​லைக் காவல் படை ஆகியவை அப்​பகு​தி​யில் ரோந்​துப் பணியை அதி​கரித்​துள்​ளன.

அருணாச்சலில் சீன ராணுவம் ஊடுருவவில்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்
நீட் வினாத்தாள் கசிவை தடுக்க புதிய வழிமுறைகள்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in