நீட் வினாத்தாள் கசிவை தடுக்க புதிய வழிமுறைகள்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

நீட் வினாத்தாள் கசிவை தடுக்க புதிய வழிமுறைகள்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் வினாத்​தாள் கசி​வைத் தடுக்க புதிய வழி​முறைகள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் மத்திய அரசு தெரி​வித்​துள்​ளது.

நீட் தேர்வு நடை​முறையை மேம்​படுத்​தக் கோரி​ அகில இந்​திய மருத்​து​வர்​கள் கூட்​டமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மத்​திய அரசின் சார்​பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்​போது, “நீட் மோசடியைத் தடுக்க போது​மான நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக வினாத்​தாள் கசிவதை தடுப்​ப​தற்கு புதிய வழி​முறை​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

புதிய வழி​முறைப்​படி 4 வித​மான வினாத்​தாள்​கள் தயாரிக்​கப்​பட்டு அதில் தேசிய தேர்​வு​கள் முகமை​யின் இயக்​குந​ரால் இரண்டு வினாத் தாள்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டு, பின்​னர் அவை அச்​சிடு​வதற்​காக இரு வேறு அச்​சகத்​துக்கு அனுப்பி வைக்​கப்​படும். இந்த நடவடிக்கை முழு​வதும் வீடியோ பதிவு மூலம் கண்​காணிக்கப்படும்.

மேலும் தேர்வு மையங்​களுக்கு வினாத்​தாள்​கள் ஆயுதம் ஏந்​திய துணை ராணுவ படை பாது​காப்​புடன் எடுத்​துச் செல்​லப்​படும்” என்​றார். ஆனால் அந்​தப் பதிலில் திருப்தி அடை​யாத நீதிப​தி​கள், ராதாகிருஷ்ணன் குழு அளித்​துள்ள பரிந்​துரைகளை செயல்​படுத்த என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது? என்​பது குறித்து மத்​திய கல்வி அமைச்​சகம் பிர​மாண பத்​திரம் தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டு, வழக்​கை 3 வாரத்​துக்​கு ஒத்​தி வைத்​தனர்​.

நீட் வினாத்தாள் கசிவை தடுக்க புதிய வழிமுறைகள்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
‘மிரட்டும்’ கிம்: அமெரிக்கா - தென் கொரியா போர்ப் பயிற்சியும், வட கொரியா பதிலடியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in