சார் தாம் யாத்திரை ஏப்ரல் 19-ம் தேதி தொடக்கம்

சார் தாம் யாத்திரை ஏப்ரல் 19-ம் தேதி தொடக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்​த​ராகண்​டில் பத்​ரி​நாத், கேதார்​நாத், கங்​கோத்ரி மற்​றும் யமுனோத்ரி ஆகிய 4 புனித கோயில்​கள் உள்​ளன. இந்த கோயில்​களுக்கு பக்​தர்​கள் புனித யாத்​திரை மேற்​கொள்​வதை ‘சார் தாம்’ யாத்​திரை என்​கின்​றனர்.

இந்த ஆண்​டுக்​கான யாத்​திரை ஏப்​ரல் 19-ம் தேதி அக் ஷய திருதியை அன்று தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில், பத்​ரி​நாத், கேதார்​நாத் கோயில் குழு (பிகேடிசி) பட்​ஜெட் கூட்​டம் நேற்று டேராடூனில் நடை​பெற்​றது. இதில் பல்​வேறு முக்​கிய முடிவு​கள் எடுக்​கப்​பட்​டன.

அதன் விவரம் வரு​மாறு: உத்​த​ராகண்​டின் 4 புனிதத் தலங்​களில் பத்​ரி​நாத், கேதார்​நாத் ஆகிய 2 கோயில்​களில் மட்​டும் இந்​துக்​கள் அல்​லாதோர் நுழைய தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இங்கு இந்​துக்​கள் அல்​லாதோரும் வியா​பாரம் செய்​கின்​றனர். இந்​துக்​கள் அல்​லாத ஏராள​மானோர் சுற்​றுலா​வும் வரு​கின்​றனர். அவர்​கள் வந்து செல்​வ​தால் கோயில்​களின் புனிதம் பாதிப்​ப​தாகப் புகார்​கள் உள்​ளன. எனவே, இந்​தத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இத்​துடன், கோயில்​களில் நிர்​ண​யிக்​கப்​பட்ட தூரத்​துக்​குள் மொபைல் போன் தடை செய்​யப்​பட்​டுள்​ளது. யமுனோத்​ரி, கங்​கோத்ரி கோயில்​களின் நடை அக் ஷய திரு​தியை நாளான ஏப்​ரல் 19ம் தேதி திறக்​கப்​படு​கிறது. கேதார்​நாத் கோயில் நடை ஏப்​ரல் 22ம் தேதி​யும் பத்​ரி​நாத் கோயில் நடை ஏப்​ரல்​ 23ம்​ தேதி​யும்​ திறக்​கப்​படும்​.

சார் தாம் யாத்திரை ஏப்ரல் 19-ம் தேதி தொடக்கம்
தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி கொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in