திருப்பதி தேவஸ்தான கோயில்கள் அனைத்தும் அதிநவீன ஆன்மிக மையங்களாக வளர்ச்சி பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு உத்தரவு

திருப்பதி தேவஸ்தான கோயில்கள் அனைத்தும் அதிநவீன ஆன்மிக மையங்களாக வளர்ச்சி பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு உத்தரவு
Updated on
1 min read

திருமலை: ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று தனது குடும்​பத்​தா​ருடன் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசித்​தார்.

அப்​போது அவர் தனது பேரன் நாரா தேவான்​ஷின் பிறந்த நாளை​யொட்​டி, திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் எஸ்​.வி. அன்​ன​தான அறக்​கட்​டளைக்கு ஒரு​நாள் அன்​ன​தான செல​வான ரூ.44 லட்​சத்​துக்கான காணிக்​கையை வழங்​கி​னார். சுவாமியை தரிசித்த பின்​னர் அவருக்கு ரங்​க​நாயக மண்​டபத்​தில் அதி​காரி​கள் தீர்த்த பிர​சாதங்​கள் வழங்கி கவுர​வித்​தனர்.

அதன் ​பின்​னர், சந்​திர​பாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்​வரி, மகனும் அமைச்​சரு​மான நாரா லோகேஷ், மரு​மகள் பிராம்​மனி மற்​றும் பேரன் நாரா தேவான்ஷ் ஆகியோ​ருடன் இணைந்து தரி​கொண்டா வெங்​க​மாம்​பாள் அன்​ன​தான கூடத்​திற்கு சென்​றார். அங்​கு, பக்​தர்​களுக்கு காலை சிற்​றுண்​டியை சந்​திர​பாபு நாயுடு மற்​றும் அவரது குடும்​பத்​தினர் பரி​மாரியதுடன், பக்​தர்​களு​டன் இணைந்து உண்​டனர்.

ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்​று, திரு​மலை​யில் 12 ஆயிரம் சதுர அடி​யில் ரூ.25 கோடி​யில் கட்​டப்​பட்ட அதிநவீன உணவு மற்​றும் நீர் பரிசோதன மையத்தை திறந்து வைத்தார். திரு​மலையில் செயற்கை நுண்​ணறிவு கமாண்ட் கண்ட்ரோல் மையத்தை அவர் ஆய்வு செய்​தார்.

அப்​போது அவர் பேசுகை​யில், ‘‘திரு​மலைக்கு ஏழு​மலை​யானை தரிசிக்க வரும் பக்​தர்​கள் எதிர் கொள்​ளும் சங்​கடங்​களை முன் கூட்​டியே ஏஐ மூலம் கண்​டறிந்து உடனுக்​குடன் தீர்த்து வைக்க வேண்​டும். திருப்​பதி தேவஸ்​தானத்​தின் அனைத்து கோயில்​களும் ஒரு அதிநவீன ஆன்​மிக மையங்​களாக செயல்​பட வேண்​டும்​’’ என்​றார்​.

திருப்பதி தேவஸ்தான கோயில்கள் அனைத்தும் அதிநவீன ஆன்மிக மையங்களாக வளர்ச்சி பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு உத்தரவு
4.1 கோடி சிறார்களுக்கு உடல் பருமன் பாதிப்பு: உலக அளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in