டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக 16 மாநிலங்களில் சிபிஐ சோதனை

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக 16 மாநிலங்களில் சிபிஐ சோதனை
Updated on
1 min read

புதுடெல்லி: டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி தொடர்​பாக தமிழகம் உட்பட 16 மாநிலங்​களில் சிபிஐ அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். அப்​போது சென்​னை, கொல்​கத்​தாவை சேர்ந்த 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

கடந்த சில ஆண்​டு​களாக இந்​தி​யா​வில் சைபர் குற்​றங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. குறிப்​பாக டிஜிட்​டல் அரெஸ்ட் என்ற பெயரில் பொது​மக்​களை மிரட்டி பணம் பறிக்​கும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இந்த சூழலில் டிஜிட்​டல் அரெஸ்ட் உட்பட 200 சைபர் குற்​றங்​களில் தொடர்​புடைய ஒரு கும்​பல் தொடர்​பாக சிபிஐ தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது.

இது தொடர்​பாக தமிழகம், பஞ்​சாப், குஜ​ராத், அசாம், மணிப்​பூர், மேற்​கு ​வங்​கம், ராஜஸ்​தான் உள்​ளிட்ட 16 மாநிலங்​களில் சிபிஐ அதி​காரி​கள் நேற்று ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தினர். சுமார் 60-க்​கும் மேற்​பட்ட சிறப்பு குழுக்​கள் 80-க்​கும் மேற்​பட்ட இடங்களில் சோதனையை மேற்​கொண்​டனர்.

சென்​னை​யில் ஒரு​வர் கைது:

இதுதொடர்​பாக சிபிஐ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி கும்​பல் உச்ச நீதி​மன்ற இணை​ய தளம் போன்ற ஓர் இணை​யதளத்தை உரு​வாக்கி பல்வேறு சைபர் குற்​றங்​களில் ஈடு​பட்டு வந்​தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்​பல் அண்மை காலத்​தில் மட்​டும் பொது ​மக்​களிடம் இருந்து ரூ.2 கோடியை மோசடி செய்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து நாடு முழு​வதும் பல்​வேறு மாநிலங்​களில் சோதனை நடத்​தினோம். அப்​போது சென்​னை, கொல்​கத்​தாவை சேர்ந்த நரேஷ் மற்​றும் சஞ்​சிப் சாஹா ஆகிய 2 பேர் கைது செய்யப்​பட்​டனர். 80 இடங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​களில் கணினி, லேப்​டாப், மொபைல்​போன்​கள் பறி​முதல் செய்யப்பட்டன. ஏராள​மான வங்​கிக் கணக்​கு​கள் முடக்கப்பட்டன. நீதி​மன்​றங்​கள், புலன்​வி​சா​ரணை அமைப்​பு​கள் பெயரில் தயாரிக்​கப்​பட்ட பல்​வேறு போலி ஆவணங்​கள் கைப்பற்றப்​பட்டு உள்​ளன.இவ்​வாறு சிபிஐ வட்​டாரங்​கள்​ தெரிவித்தன.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக 16 மாநிலங்களில் சிபிஐ சோதனை
அமலாக்கத் துறைக்கு எதிரான மனுவை நடிகை ஜாக்குலின் திரும்ப பெற உச்ச நீதிமன்றம் அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in