‘பிஎச்இஎல்’ நிறுவனத்தில் 32 கிலோ வெள்ளி மோசடி - 2 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

‘பிஎச்இஎல்’ நிறுவனத்தில் 32 கிலோ வெள்ளி மோசடி - 2 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லியை அடுத்த குரு​கி​ராமில் மத்​திய அரசின் பொதுத்​துறை நிறு​வன​மான பாரத் ஹெவி எலக்ட்​ரிக்​கல்ஸ் லிமிடெட் (பிஎச்இஎல்) நிறு​வனத்தின் சூரிய மின்கல ஆலை உள்ளது.

இங்கு வெள்​ளியை பயன்​படுத்தி ஒளிமின்​னழுத்த மின்​கலங்​கள் தயாரிக்​கப்​படு​கிறது. பிஎச்இஎல் நிறு​வனத்​தின் அமார்​பஸ் சிலிக்கான் சோலார் செல் ஆலை​யில் உள்ள பாது​காப்​புப் பெட்டகத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த 31.65 கிலோ வெள்ளி காணாமல் போனது 2024-ம் ஆண்டு நடை​பெற்ற ஆய்​வின்​போது தெரிய வந்​தது. காணா​மல் போன வெள்​ளி​யின் மதிப்பு சுமார் ரூ.71 லட்​சம்.

இந்த விவ​காரம் தொடர்​பாக, கடந்த பிப். 26-ம் தேதி சிபிஐ நடத்திய ஆரம்​பகட்ட விசா​ரணை​யில், ஆலை​யின் கூடு​தல் பொது மேலா​ள​ரும் தலை​வரு​மான டாக்​டர் பாரத் குமார் பந்த் மற்​றும் அப்​போது மேலா​ள​ராக இருந்த ஆஷிஷ் குமார் ஆகியோர் குற்​றம் புரிந்​ததற்​கான ஆதா​ரங்​கள் இருப்​பது தெரிய​வந்​தது.

இதுதொடர்​பாக, சிபிஐ துணை ஆய்​வாளர் அளித்த புகாரின்பேரில், சிபிஐ ஜூலை 8-ம் தேதி எஃப்​ஐஆர் பதிவு செய்தது. இதில், ஆலை​யின் கூடு​தல் பொது மேலா​ள​ரும், தலை​வரு​மான பந்த் மற்​றும் தற்​போது டெல்​லி​யில் உள்ள பிஎச்இஎல் நிறு​வனத்​தின் தலைமை அலு​வல​கத்​தில் மேலா​ள​ராக பணியாற்றி வரும் ஆஷிஷ் ஆகியோரின் பெயர்​கள்​ இடம்பெற்றுள்​ளன.

‘பிஎச்இஎல்’ நிறுவனத்தில் 32 கிலோ வெள்ளி மோசடி - 2 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
எம்எல்ஏ.க்களுக்கு வாகனம் உட்பட பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in