பிஹார் போராட்ட மாணவர்கள் மீது சுட்ட காவலர் சஸ்பெண்ட்

பிஹார் போராட்ட மாணவர்கள் மீது சுட்ட காவலர் சஸ்பெண்ட்
Updated on
1 min read

பாட்னா: நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​தி​யக் கல்வி அமைச்​ச​ராக இருந்த தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக்​கோரி பிஹாரில் கடந்த 25-ம் தேதி பந்த் நடை​பெற்​றது. அப்​போது சிவான் மாவட்​டத்​தில் மாணவர்​கள் போராட்​டம் நடத்​தினர்.

அப்​போது பிஹார் ஆயுதப்​படை காவலர் ஒரு​வர் ஏ.கே.47 ரக துப்பாக்​கி​யால் மாணவர்​கள் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​னார். இதில் 3 பேர் காயம் அடைந்​தனர். இவர்​கள் பாட்​னா​வில் உள்ள ஜெய்​பிரபா மெதந்தா மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்​தவர்​களில் ஒரு​வர் 15 வயது சிறுவன். இவர் கடை​யில் வேலை பார்க்​கிறார்.

பணி முடித்து வீடு திரும்​பும் போது போராட்​டக் கூட்​டத்​தில் சிக்கி குண்டு காயம் அடைந்​துள்​ளார். இவர் கழுத்​தில் பாய்ந்த குண்டை மருத்​து​வர்​கள் அகற்​றினர். இந்​நிலை​யில் காவலர் ஏ.கே.-47 துப்பாக்​கி​யால் சுடும் வீடியோ சமூக ஊடகங்​களில் வேக​மாக பரவியது.

மாணவர்​கள் மீது ஏ.கே.47 துப்​பாக்​கி​யால் சுட்​டதை எதிர்க்​கட்சி தலை​வர்​கள் கடுமை​யாக கண்​டித்​தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்​திய காவலர் சஸ்​பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து துறை ரீ​தி​யான விசா​ரணைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

பிஹார் போராட்ட மாணவர்கள் மீது சுட்ட காவலர் சஸ்பெண்ட்
மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் அவசியம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இல்லை: மத்திய அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in