ம.பி: வேலை தேடும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரிகள் உட்பட 3 பேர் கைது

சந்​தன் யாதவ், அம்​ரின், அப்​ரின்

சந்​தன் யாதவ், அம்​ரின், அப்​ரின்

Updated on
1 min read

போபால்: மத்​திய பிரதேசத்​தில் வேலை தேடும் இளம் பெண்​களை குறி​வைத்து பாலியல் தொழிலில் ஈடு​படுத்​தி​ய​ இரு சகோதரி​கள் உட்பட 3 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

அப்​பாஸ் நகரில் உள்ள ஒரு சிறிய சேரிப் பகு​தி​யில் வசித்து வந்​தவர்​கள் அம்​ரின் மற்​றும் அப்​ரின். சகோதரி​களான இவர்​கள் பொருளா​தார ரீதி​யில் பின்​தங்​கிய இளம் பெண்​களை குறி​வைத்து அவர்​களுக்கு இலவச தங்​குமிடம் உணவுடன் மாதம் ரூ.10,000 சம்​பளம் தரு​வ​தாக ஆசை​வார்த்​தைகளை கூறி வேலைக்கு தேர்வு செய்​துள்​ளனர். இதையடுத்து அவர்​களை பாலியல் தொழிலில் ஈடு​படுத்​தி​யதுடன், கட்​டாய மதமாற்​ற​மும் செய்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக, 21 மற்​றும் 32 வயதுடைய இரு பெண்​கள் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு பாக் செவானியா காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரின் அடிப்​படை​யில் அம்​ரின் மற்​றும் அப்​ரின் மற்​றும் அவர்​களுக்கு உதவி​யாள​ராக செயல்​பட்ட சந்​தன் யாதவ் ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

மேலும், இந்த வழக்​கில் தலைமறை​வாக உள்ள பிலால், சானு மற்​றும் யாசிர் ஆகிய மூவர் தேடப்​பட்டு வரு​கின்​றனர்.இளம் பெண்​களை பாலியல் தொழிலில் ஈடு​படுத்தி சட்​ட​விரோத​மாக கிடைத்த பணத்​தின் மூல​மாக அவர்​கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்​ததை காவல்​ துறை​யினர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர்.

பாதிக்​கப்​பட்ட இரண்டு பெண்​கள் அளித்த புகாரில் கூறி​யுள்​ள​தாவது: ஏழ்​மை​யில் இருந்த எங்​களுக்கு வேலை ​தரு​வ​தாகக் கூறி மெல்ல பார்ட்​டி, பப், லாஞ்​சுக்கு அழைத்து அங்கு சென்று செல்​வந்​தர்​களு​டன் ஒன்​றாக இருக்க வற்​புறுத்​தினர். மது, எம்டி போதைப் பொருட்​களை கொடுத்து சுயநினை​வற்ற நிலை​யில் இருந்​த​போது நாங்​கள் வன்​கொடுமைக்கு ஆளானோம்.

இதேபோன்​று, சத்​தீஸ்​கரை சேர்ந்த பெண் கடந்த டிசம்​பர் 2025-ல் வேலை நிமித்​த​மாக அகம​தா​பாத் அழைத்​துச் செல்​லப்​பட்ட போது அங்கு அம்​ரினின் உறவினர் யாசிர் என்​பவ​ரால் வன்​கொடுமை செய்​யப்​பட்​டார். மற்​றொரு பெண் சந்​தன் யாதவ் என்​ப​ரால் பாலியல் கொடுமைக்கு ஆளா​னார். வெளியே சொன்​னால் கொலை செய்​து​விடு​வ​தாக அம்​ரின், அப்​ரின் ஆகியோர் மிரட்​டினர். இவ்​வாறு புகாரில் கூறப்​பட்​டுள்​ளது.

அம்​ரின், அப்​ரின் கைது செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்து அவர்​களின் போன்​களை ஆய்வு செய்​த​போது பல இளம்​பெண்​களின் புகைப்​படங்​கள் அடங்​கிய வாட்​ஸ்​அப் குழுக்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளன. பாதிக்​கப்​பட்ட பெண்​கள் குஜ​ராத் மற்​றும் மும்பை என இரு மாநிலங்​களுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​ட​தால் இதில் மிகப்​பெரிய நெட்​வொர்க் சம்​பந்​தப்​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ளது. இதையடுத்து இவ்​வழக்​கில் வி​சா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>சந்​தன் யாதவ், அம்​ரின், அப்​ரின்</p></div>
தனித்து விடப்பட்ட தவெக: அதீத நம்பிக்கையில் இருக்கிறாரா விஜய்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in