“பல்வேறு திட்டங்களுக்கு பகவத் கீதைதான் அடிப்படை” - உடுப்பியில் பிரதமர் மோடி பேச்சு

“பல்வேறு திட்டங்களுக்கு பகவத் கீதைதான் அடிப்படை” - உடுப்பியில் பிரதமர் மோடி பேச்சு
Updated on
2 min read

பெங்களூரு: மத்​திய அரசு செயல்​படுத்தி வரும் பல்​வேறு மக்​கள் நல திட்​டங்​களுக்கு பகவத் கீதை​தான் அடிப்​படை என்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயி​லில் வழி​பாடு நடத்​திய பிறகு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​தார்.

கர்​நாடக மாநிலம் உடுப்​பி​யில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மடத்​தில் 1 லட்​சம் பேர் பகவத் கீதையை பாராயணம் செய்​யும் நிகழ்ச்​சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று கர்​நாடக மாநிலத்​துக்கு வருகை தந்​தார். டெல்​லி​யில் இருந்து தனி விமானம் மூலம் மங்​களூரு வந்த பிரதமர் பின்​னர் ராணுவ ஹெலி​காப்​டர் மூலம் உடுப்​பியை வந்​தடைந்​தார்.

உடுப்பி கிருஷ்ணன் கோ​யிலுக்கு சாலை மார்க்​க​மாக வந்த பிரதமருக்கு மக்​கள் மலர்​தூவி வரவேற்பு அளித்​தனர். உடுப்பி கிருஷ்ணன் கோ​யிலுக்கு வந்த பிரதமருக்கு பூரண கும்ப மரி​யாதை அளிக்​கப்​பட்​டது. கோ​யில் வளாகத்​தில் கரு​வறைக்கு எதிரே கட்​டப்​பட்ட சுவர்ண தீர்த்த மண்​டபத்தை பிரதமர் திறந்து வைத்து கிருஷ்ண மடத்​தின் மடா​திபதி தீர்த்த சுவாமிகளை சந்​தித்து ஆசி பெற்​றார்.

அதன் பின்​னர் மாணவர்​கள், துறவி​கள், அறிஞர்​கள் மற்​றும் பல்​வேறு தரப்​பைச் சேர்ந்த ஒரு லட்​சம் பேர் ஒன்​றிணைந்து பகவத் கீதையை ஒரே நேரத்​தில் பாராயணம் செய்​யும் நிகழ்ச்​சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார்.

இந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று பிரதமர் மோடி பேசி​ய​தாவது: மூன்று நாட்​களுக்கு முன்பு நான் கீதை​யின் புண்​ணிய பூமி​யான குருஷேத்​திரத்​தில் இருந்​தேன்​. இப்​போது, கிருஷ்ண​ரால் ஆசீர்​வ​திக்​கப்​பட்ட ஜகத்​குரு ஸ்ரீ மத்​வாச்​சா​ரிய​ரால் புகழ்​பெற்ற இந்த நிலத்தை பார்​வை​யிடு​வது எனக்கு மிகுந்த ஆத்ம திருப்​தியை அளிக்​கிறது.

நான் குஜ​ராத்​தில் பிறந்​தேன். குஜ​ராத்​தும் உடுப்​பி​யும் ஆழமான உறவைக் கொண்​டுள்​ளன. மாதா ரூமினி துவாரகை​யில் உள்ள கிருஷ்ணரின் சிலையை வழிபட்டு வந்​த​தாக நம்​பப்​படு​கிறது. பின்​னர் அந்த சிலை ஜகத்​குரு மத்​வாச்​சா​ரிய​ரால் இங்கு பிர​திஷ்டை செய்​யப்​பட்​டது. கடந்த ஆண்டு நான் கடலுக்கு அடி​யில் துவாரகைக்கு சென்​றேன். இப்​போது இங்கு கிருஷ்ணர் சிலை​யின் தரிசனம் எனக்கு ஆத்​மார்த்​த​மான ஆன்​மீக அனுபத்தை அளித்​துள்​ளது.

ஜன சங்​கம் மற்​றும் பார​திய ஜனதா கட்​சி​யின் நல்​லாட்சி மாதிரி​யின் பிறப்​பிட​மாக உடுப்பி இருந்து வரு​கிறது. இது கர்​மபூமி.

கடந்த 1968-ம் ஆண்டு உடுப்பி மக்​கள் நமது ஜன சங்க வேட்​பாளர் வி.எஸ். ஆச்​சார்​யாவை இங்​குள்ள நகராட்சி மன்​றத்​துக்கு தேர்ந்​தெடுத்​தனர். இதன் மூலம், உடுப்பி ஒரு புதிய நிர்​வாக மாதிரிக்கு அடித்​தளமிட்​டது. இன்று தேசிய அளவில் ஈர்க்​கப்​பட்ட நாம் காணும் தூய்மை பிரச்​சா​ரம் முன்பு உடுப்​பி​யால் ஐந்து தசாப்​தங்​களுக்கு முன்பு ஏற்​றுக் கொள்​ளப்​பட்​டது. நீர் வழங்​கல், வடி​கால் அமைப்​பு​களுக்கு ஒரு புதிய முன் மாதிரி 1970-களில் உடுப்​பி​யில் செயல்​படுத்​தப்​பட்​டது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் போதனை​கள் எல்லா யுகங்​களி​லும் நடை​முறைக்கு ஏற்​றவை. பகவத் கீதை​யின் வார்த்​தைகள் தனி நபருக்கு மட்​டுமல்ல தேசத்​தின் கொள்​கைகளுக்​கும் வழி​காட்​டு​கின்​றன. பொது நலனுக்​காக பாடுபட வேண்​டும் என்​பதே கீதை​யின் சாராம்​சம். அந்த அடிப்​படை​யில்​தான் அனை​வருக்​கும் வீடு, பெண்​களுக்கு பாது​காப்​பு, பெண்​களுக்கு அதி​காரமளித்​தல், ஆயுஷ்​மான் பாரத் காப்​பீடு போன்ற மக்​கள் நல திட்​டங்​களை மத்​திய அரசு தொடர்ந்து செயல்​படுத்​தி வரு​கிறது. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

“பல்வேறு திட்டங்களுக்கு பகவத் கீதைதான் அடிப்படை” - உடுப்பியில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லியில் காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மூச்சுத் திணறும்போது பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in