ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட‌ வழக்கில் பெங்களூரு போலீஸார் 2 பேரிடம் தீவிர விசாரணை

ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட‌ வழக்கில் பெங்களூரு போலீஸார் 2 பேரிடம் தீவிர விசாரணை
Updated on
1 min read

பெங்களூரு: பெங்​களூரு​வில் எச்​டிஎஃப்சி வங்கி ஏடிஎம்​களில் பணம் நிரப்​பும் வேனில் ரூ.7.11 கோடியை மர்ம நபர்​கள், ரிசர்வ் வங்கி அதி​காரி​களைப் போல நடித்து கொள்​ளை​யடித்து சென்​றனர். சித்​தாபுரா போலீ​ஸார் இதுகுறித்து வழக்​குப்​ப​திவு செய்​து, 8 தனிப்​படைகளை அமைத்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

முதல்​கட்​ட​மாக வேனில் இருந்த வங்கி ஊழியர் தம்மை​யா, துப்​பாக்கி ஏந்​திய பாது​காவலர் ராஜண்​ணா, ஓட்​டுநர் வினோத், காவலர் அஃப்​தாப் ஆகிய 4 பேரிட​மும் தனித்​தனி​யாக விசா​ரணை நடத்​தினர்.

மேலும் நால்​வரின் சமூக வலைதள கணக்​கு​கள், செல்​போன், கணினி ஆகிய​வற்றை கைப்​பற்றி ஆராய்ந்து வரு​கின்​றனர். செல்​போன் எண்​களுக்கு வந்த அழைப்​பு​கள், குறுஞ்​செய்​தி​கள், புகைப்​படங்​கள், வாட்ஸ் அப்​ தகவல்​கள் ஆகிய​வற்றை ஆராய்ந்து வரு​கின்​ற‌னர்.

இந்​நிலை​யில் ஏடிஎம் பணம் நிரப்​பும் வாக​னத்​தின் பாது​காவல​ராக பணி​யாற்​றிய‌ கோவிந்​த​ராஜபுரா காவல் நிலை​யத்​தைச் சேர்ந்த போலீஸ்​காரர் ஒரு​வரை​யும், முன்​னாள் ராணுவ வீரர் ஒரு​வரை​யும் பிடித்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இரு​வரும் கொள்ளை சம்​பவம் நடந்த தினத்​தன்று தொடர்ந்து செல்​போனில் பேசி வந்​ததை​யும் போலீ​ஸார் கண்​டறிந்​துள்​ளனர்.

ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட‌ வழக்கில் பெங்களூரு போலீஸார் 2 பேரிடம் தீவிர விசாரணை
நாட்டில் புதிதாக 4 தொழிலாளர் சட்டங்கள் அமல்: ஒரு வாரத்தில் விதிமுறைகள் வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in