அயோத்தி கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கு: டின்னு, மனிஷிடம் 39 மணி நேரம் விசாரிக்க அனுமதி

அயோத்தி கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கு: டின்னு, மனிஷிடம் 39 மணி நேரம் விசாரிக்க அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி​கள் ராம் ஷங்கர் யாதவ் (எ) டின்னு மற்​றும் அவரது சகோ​தரி மகன் மனிஷ் யாதவ் ஆகியோரைப் போலீ​ஸார் நேற்று அயோத்தி நீதி​மன்றத்தில் ஆஜர்​படுத்​தினர்.

இவர்​கள் இரு​வரை​யும் 7 நாட்​கள் காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றத்​தில் லஞ்ச ஒழிப்​புத் துறை சார்​பில் அனு​மதி கோரப்​பட்​டது. அதை ஏற்ற நீதி​மன்​றம், இரு​வரிட​மும் 39 மணி நேரம் விசா​ரணை நடத்த அனு​மதி அளித்​தது. இதையடுத்​து, ராமர் கோயி​லில் திருடப்​பட்ட மொத்​தத் தொகை, யாரெல்​லாம் உடந்​தை, ஒட்​டுமொத்த திருட்டுக்கு பின்​னணி​யில் உள்​ளவர்​கள் என்​பது குறித்து சிறப்பு விசா​ரணைக் குழு​வினர் (எஸ்​ஐடி) விசா​ரிக்க உள்​ளனர்.

ஏற்​கெனவே போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் ராமர் கோயில் திருட்டை இரு​வரும் ஒப்​புக் கொண்​டுள்​ளனர். ஆனால், டின்னுவிடம் இது​வரை வெறும் ரூ.1 லட்​சம் மட்​டுமே பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. கோயி​லில் நடந்த முறை​கேடு​கள் அனைத்துக்​கும் மூலக் காரண​மாக டின்னு இருந்​துள்​ளார். அவரிடம்​தான் நன்​கொடை பணம், நகைகள் வைக்​கும் பெட்டிகளின் சாவி​கள் இருந்​துள்​ளன.

திருட்டு விவ​காரம் வெளி​யில் கசிந்த பிறகு ஸ்ரீ ராமர் கோயில் தீர்த்த ஷேத்ரா அறக்​கட்​டளை​யில் காணிக்​கைகள் எண்​ணும் பணி கோயி​லின் அடித்தள அரங்​குக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. அத்துடன், காணிக்கை எண்​ணும் பணி​களை சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்​தர்​களும் பார்​வை​யிடும் வகை​யில் பெரிய எல்​இடி திரை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

காணிக்கை எண்​ணும் பணி​யைக் கண்​காணிக்க ராணுவம், காவல் துறை​யில் பணி​யாற்றி ஓய்வு பெற்ற எஸ்​ஐஎஸ் மற்​றும் பிபிஐஎஸ் நிறு​வனங்​களின் உயர் அதி​காரி​களுக்கு மட்​டும் அனுமதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

எஸ்ஐடி அறிக்கை

கோயில் காணிக்கை திருட்டை விசா​ரித்து வரும் எஸ்​ஐடி விரைவில் தனது அறிக்​கையை உ.பி. அரசிடம் சமர்ப்​பிக்​கும் என்று தெரி​கிறது. அறக்​கட்​டளை முன்​னாள் நிர்​வாகி டாக்​டர் அனில் மிஸ்ரா மீதும் சந்​தேகம் எழுந்​துள்​ளது. இவரது பரிந்​துரையால் காணிக்கை பொறுப்​பாள​ராக இருந்த சுபாஷ் ஸ்ரீ வத்ஸவா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். தனக்கு நெருக்கமான சுபாஷ் கோயி​லில் திருடியதை மிஸ்ரா கண்டுகொள்​ள​வில்லை என்று அவர் மீது புகார் உள்​ளது.

காணிக்கை திருட்டு மிகப்​பெரிய தவறு என்று ஒப்​புக் கொண்டுள்ள அறக்​கட்​டளை, அதற்கு மன்​னிப்பு கோரும் வகையில் சிறப்பு பூஜைகள் நடத்​தினர். கோயில் வளாகத்​துக்கு உள்​ளே​யும் வெளி​யே​யும் மொத்​தம் 70 வேத விற்​பன்​னர்​கள் இதில் பங்​கேற்​றனர். பத்து நாட்​களுக்​கான இந்த பிராயச்​சித்த வழி​பாடு, கரு​வறை மற்​றும் சுற்​றுச்​சுவர் பகு​தி​களில் நடை​பெறுகிறது. வேதபாராயணம், ஹவனம்​, ருத்​ராபிஷேகம்​ மற்​றும்​ ராமார்ச்சனை ஆகிய​வை நடை​பெறுகின்​றன.

அயோத்தி கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கு: டின்னு, மனிஷிடம் 39 மணி நேரம் விசாரிக்க அனுமதி
சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in