பெண்கள் தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம்: அசாமில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கார்கே

அசாம் மாநிலம் நவ்போய்சா நகரில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த கட்சித் தொண்டர்கள். படம்: பிடிஐ

அசாம் மாநிலம் நவ்போய்சா நகரில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த கட்சித் தொண்டர்கள். படம்: பிடிஐ

Updated on
1 min read

குவாஹாட்டி: அ​சாமில் பெண்​கள் தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் நிதி​யுதவி வழங்​கப்​படும் என்​றும் ஒரு குடும்​பத்​துக்கு ரூ.25 லட்​சம் மருத்​து​வக் காப்​பீடு வழங்​கப்​படும் என்​றும் காங்​கிரஸ் தேர்​தல் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

அசாமில் வரும் ஏப்​ரல் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி காங்​கிரஸ் கட்​சி​யின் தேர்​தல் அறிக்​கையை அக்​கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே நேற்று வெளி​யிட்​டார்.

நவ்​போய்சா பகு​தி​யில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்ற கார்கே பேசி​ய​தாவது: அசாமில் பாஜக அரசு தற்​போது பெண்​களுக்கு நிபந்​தனை​யுடன் மாதாந்​திர நிதி​யுதவி வழங்​கு​கிறது. குறிப்​பாக அந்​தப் பயனைப் பெற பாஜக உறுப்​பின​ராக இருக்க வேண்​டும். ஆனால், காங்​கிரஸ் ஆட்​சிக்கு வந்​தால் எந்த நிபந்​தனை​யுமின்றி அனை​வருக்​கும் இந்​தப் பலன்​கள் கிடைக்​கும்.

சொந்​த​மாக தொழில் தொடங்க விரும்​பும் பெண்​களுக்கு ரூ.50,000 நிதி​யுதவி வழங்​கப்​படும். ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.25 லட்​சம் மதிப்​பிலான ரொக்​கமில்லா மருத்​து​வக் காப்​பீடு வழங்​கப்​படும். ராஜஸ்​தான், கர்​நாடகா மற்​றும் தெலங்​கானா ஆகிய மாநிலங்​களில் காங்​கிரஸ் ஏற்​கெனவே இத்​தகைய வாக்​குறு​தி​களை நிறைவேற்​றி​யுள்​ளது.

தற்​போதைய அரசைப் போல ஆண்​டு​தோறும் நிலப் 'பட்​டா' (உரிமை ஆவணங்​கள்) வழங்​கு​வதற்​குப் பதிலாக, 10 லட்​சம் 'பூமிபுத்​திரர்​களுக்​கு' (பூர்​வீகக் குடிமக்​கள்) நிரந்தர பட்டா வழங்​கு​வோம். இதன் மூலம் மக்​கள் ஆண்​டு​தோறும் தங்​கள் ஆவணங்​களைப் புதுப்​பிக்​கவோ அல்​லது அதி​காரி​களிடம் சலுகை கேட்டு ஒரு இடத்​திலிருந்து மற்​றொரு இடத்​திற்கு அலைந்து திரியவோ வேண்​டிய​தில்​லை. கர்​நாட​கா​வில் நாங்​கள் ஏற்​கெனவே 6,80,000 பேருக்கு நில ஆவணங்​களை வழங்​கி​யுள்​ளோம்.

மாநிலத்​தில் உள்ள அனைத்து முதி​ய​வர்​களுக்​கும் மாதம் ரூ.1,250 வழங்​கப்​படும். எனவே, வாக்​காளர்​கள் காங்​கிரஸை ஆதரித்​து, அசாமில் பாஜக அரசின் தவறான ஆட்சி மற்​றும் ஊழலில் இருந்து மாநிலத்தை விடுவிக்க உதவ வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>அசாம் மாநிலம் நவ்போய்சா நகரில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த கட்சித் தொண்டர்கள். படம்: பிடிஐ</p></div>
அசாமில் 3-வது முறை ஆட்சி: அமித் ஷா நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in