ஆரவல்லி மலைத்தொடரின் 90 சதவீதம் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்தான்: மத்திய அமைச்சர் விளக்கம்

ஆரவல்லி மலைத்தொடரின் 90 சதவீதம் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்தான்: மத்திய அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

லக்னோ: ஆர​வல்லி மலைத்​தொடரை பாது​காக்க வேண்​டும் என அகிலேஷ் யாதவ் வலி​யுறுத்​திய நிலை​யில், அதன் 90% பாது​காக்​கப்​பட்ட பகு​தி​தான் என மத்​திய அமைச்​சர் விளக்​கம் அளித்​துள்​ளார்.

சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் நேற்று கூறும்​போது, “ஆர​வல்லி மலைத்​தொடர் டெல்​லிக்கு ஒரு இயற்கை கேடய​மாக செயல்​படு​கிறது. குறிப்​பாக காற்று மாசைக் குறைப்​ப​தி​லும், வெப்​பநிலை​யைச் சீராக்​கு​வ​தி​லும், மழை பெய்​ய​வும் முக்​கிய பங்கு வகிக்​கிறது. எனவே, ஆரவல்லி மலைத்​தொடர் உயிர்ப்​புடன் இருந்​தால்​தான், தலைநகரும் உயிர்ப்​புடன் இருக்​கும். சுற்​றுச்​சூழலை பாது​காப்​ப​தற்​கும், சூழலியல் சமநிலையை மீட்​டெடுப்​ப​தற்​கும் இந்த மலைத்​தொடர் அவசி​ய​மாகிறது.

இந்​நிலை​யில், ஆரவல்லி மலைத்​தொடர் பகு​தி​யில் சட்​ட​விரோத சுரங்​கத் தொழில் மற்​றும் நிலத்​தின் மீதான தணிக்​கையற்ற பேராசை ஆகியவை டெல்​லியை உலகின் மிக மோச​மான மாசு தலைநக​ராக மாற்​றிக் கொண்​டிருக்​கின்​றன. எனவே, ஆரவல்லி மலைத்​தொடரை பாது​காக்க வேண்​டியது அவசி​யம்” என்​றார்.

இதுகுறித்து மத்​திய சுற்​றுச்​சூழல் துறை அமைச்​சர் பூபேந்​திர யாதவ் நேற்று கூறும்​போது, “ஆர​வல்லி மலைத்​தொடர் பகு​தி​யில் 90% பகுதி பாது​காக்​கப்​பட்​ட​வை​தான். உச்ச நீதி​மன்​றத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட ஒரு கட்​டமைப்​பானது, இந்த மலைத்​தொடருக்கு வலு​வான பாது​காப்பை வழங்​கு​கிறது. குறிப்​பாக, ஒரு விரி​வான மேலாண்மை திட்​டம் இறுதி செய்​யப்​படும் வரை புதிய சுரங்க குத்​தகை ஒப்​பந்​தங்​களுக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது.

மொத்​தம் உள்ள 1.44 லட்​சம் சதுர கி.மீ. பரப்​பள​வில் வெறும் 0.19% பகு​தி​யில் மட்​டுமே இப்​போது சுரங்​கப் பணி​களை மேற்​கொள்ள தகுதி பெற்​றுள்​ளது. மற்ற பகு​தி​கள் பாது​காக்​கப்​பட்​டுள்​ளன. எனவே, பொய்​யான தகவல் பரப்​புவதை நிறுத்​திக்​ கொள்​ள வேண்​டும்’’ என்றார்​.

ஆரவல்லி மலைத்தொடரின் 90 சதவீதம் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்தான்: மத்திய அமைச்சர் விளக்கம்
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in