ஜெகன்மோகன் ஆட்சியில் ஆந்திர வளர்ச்சி தடைபட்டது: முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஜெகன்மோகன் ஆட்சியில் ஆந்திர வளர்ச்சி தடைபட்டது: முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
Updated on
1 min read

அமராவதி: ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, அமராவ​தி​யில் உள்ள தலைமைச் செயல​கத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

கடந்த ஜெகன் மோகன் அரசு, மின்​சார உற்​பத்தி திட்​டங்​களுக்​காக மக்​களிடம் மின் கட்​ட​ணத்தை உயர்த்​தி, ரூ.9 ஆயிரம் கோடி வரை செல​விட்​டது. ஆனால் தற்​போது மின் கட்​ட​ணத்தை உயர்த்​தாமலேயே நாம் மின்​சார உற்​பத்​தியை பெருக்கிக் கொண்​டோம். அடுத்த ஆண்டு கூட மின் கட்​ட​ணத்தை உயர்த்த மாட்​டோம்.

ஒய்​.எஸ்​.ஆர் காங்​கிரஸ் கட்​சி​யின் ஆட்​சி​யில் ஆந்​தி​ரா​வின் ‘பி​ராண்ட்’ அடிபட்டு போனது. அவர்​கள் செய்த அராஜகத்​தால் சில நிறு​வனங்​கள் நம் மாநிலத்தை விட்டே சென்று விட்​டன. ஜெகன் ஆட்​சி​யில் ஆந்​தி​ரா​வின் வளர்ச்சி கூட கடந்த 5 ஆண்​டு​களில் தடைபட்​டது.

3 மாதங்​களுக்கு ஒரு​முறை மாநிலத்​தின் பொருளா​தார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வரு​கிறோம். அரசு சொத்​துகளை அடமானம் வைத்து கடந்த அரசு ஆட்சி புரிந்​தது. மத்​திய அரசு வழங்​கிய நிதியை வேறு திட்​டங்​களுக்கு செல​வழித்​த​தால், பல திட்​டங்​கள் நின்​று​விட்​டன. இதி​லும் பல முறைகேடுகள் நடந்​துள்​ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

ஜெகன்மோகன் ஆட்சியில் ஆந்திர வளர்ச்சி தடைபட்டது: முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
“அரசியலமைப்பும் பகவத் கீதையும் ஒன்றுதான்” - பவன் கல்யாண் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in