இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் கூட்டு: ராகுலின் ஜெர்மனி பயணம் குறித்து பாஜக விமர்சனம்

பாஜக எம்​.பி. சுதான்ஷு திரிவேதி

பாஜக எம்​.பி. சுதான்ஷு திரிவேதி

Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வுக்கு எதி​ரான சக்​தி​களு​டன் காங்​கிரஸ் கூட்டு வைத்​துள்​ள​தாக, ராகுலின் ஜெர்​மனி பயணம் குறித்து பாஜக விமர்​சனம் செய்​துள்​ளது.

காங்​கிரஸ் முன்​னாள் தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி சமீபத்​தில் ஜெர்​மனி சென்​றிருந்​தார். அங்கு நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அவர், இந்​தியா மீது பல்​வேறு விமர்​சனங்​களை முன்​வைத்​தார்.

இதுகுறித்து பாஜக எம்​.பி. சுதான்ஷு திரிவேதி நேற்று கூறிய​தாவது: முன்​னாள் பிரதமர் ராஜிவ் காந்​தி ஆலோ​சக​ராக விளங்​கிய சாம் பிட்​ரோ​டா, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யின் ஆலோ​சக​ராக​வும் விளங்​கு​கிறார். அவர் அளித்த பேட்​டி​யில், “உல​களா​விய முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் கட்சி அங்​கம் வகிக்​கிறது. அதன் கூட்​டத்​தில் பங்​கேற்​க ராகுல் ஜெர்​மனிக்கு பயணம் செய்​தார்” என்றார்.

உலகளா​விய முற்​போக்​குக் கூட்​ட​ணி, இந்​தி​யா​வுக்கு எதி​ரான கட்​டுக் கதைகளை ஊக்​குவிக்​கும் பல அமைப்​பு​களு​டன் தொடர்பு வைத்​துள்​ளது.

அந்​தக் கூட்​ட​ணிக்​கும் காங்​கிரஸுக்​கும் உள்ள தொடர்பு குறித்து சாம் பிட்​ரோ​டா​விடம் கேட்​ட​ போது, ராகுல் காந்​தி​யும் தானும் அதில் உறுப்​பின​ராக இருப்​ப​தாக கூறி​யுள்​ளார். எனவே, இந்​தி​யா​வுக்கு எதி​ரான உலகளா​விய சதி​யில் காங்​கிரஸும் உறுப்​பின​ராகி​விட்​டதா என நான் கேட்​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

மேலும் சாம் பிட்​ரோடா பேசும் வீடியோவை பாஜக சமூகவலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​துள்​ளது. அத்​துடன், “இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் ஜார்ஜ் சோரஸுடன் தொடர்புடைய உலகளா​விய கூட்​ட​ணி​யில் ராகுல் அங்​கம் வகிக்​கிறார் என பிட்​ரோ​டா ஒப்​புக் கொண்​டுள்​ளார். முற்​போக்​கு​வாத போர்​வை​யில் செயல்​படும் அமைப்பு இந்​திய அரசி​யலில் ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது. இத்​தகைய தொடர்பு உள்​ளதா என்​பது இப்​போது கேள்வி அல்ல, அவை ஏன் இவ்​வளவு சாதா​ரண​மாக ஏற்​றுக் கொள்​ளப்​படு​கின்றன என்​பது​தான் கேள்​வி. இதற்கு ராகுல்​ எப்​போது பதில்​ அளிப்​பார்​?” என பதி​விடப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>பாஜக எம்​.பி. சுதான்ஷு திரிவேதி</p></div>
இந்த ஆண்டில் 35,476 கிலோ செம்மரம் பறிமுதல்: கடத்தல்காரர்களின் சொத்து ஜப்தி செய்யப்படும் - திருப்பதி மாவட்ட எஸ்.பி. சுப்புராயுடு எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in