சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம்: குடும்ப நல நீதிமன்ற உத்தரவு ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்

சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம்: குடும்ப நல நீதிமன்ற உத்தரவு ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

பிரயாக்ராஜ்: பிரிந்து வாழும் மனை​விக்கு ஜீவ​னாம்​சம் வழங்க வேண்​டும் என்ற கீழமை நீதி​மன்ற உத்​தரவை அலகா​பாத் உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது. வரு​மானம் ஈட்​டும் அந்​தப் பெண் தனது உண்​மை​யான சம்​பளத்தை மறைத்​து​விட்​ட​தாக உயர் நீதி​மன்​றம் கூறி​யுள்​ளது.

பிரிந்து வாழும் மனை​விக்கு ஜீவ​னாம்​சம் வழங்க வேண்​டும் என்று அங்​கித் ஷா என்​பவருக்கு கவுதம புத்த நகரில் உள்ள குடும்ப நல நீதி​மன்​றம் கடந்த பிப்​ர​வரி​யில் உத்​தர​விட்​டிருந்​தது. இதற்கு எதி​ராக அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​தில் அங்​கித் ஷா மேல்​முறை​யீடு செய்​தார்.

அவரது தனது தரப்​பில், “வரு​மானம் ஈட்​டு​வதை குடும்ப நல நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த பிர​மாண பத்​திரத்​தில் மனைவி மறைத்து விட்​டார். பின்​னர் விசா​ரணை​யில் அதை ஒப்​புக்​கொண்​டார். இதன் மூலம் அவர் தூய்​மை​யான கரங்​களு​டன் விசா​ரணை நீதி​மன்​றத்​துக்கு வரவில்​லை” என வாதிட்​டார்.

இவ்​வழக்​கில் குடும்ப நல நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை நீதிபதி மதன் பால் சிங் ரத்து செய்​தார். அவர் தனது தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

அப்​பெண் தனது கல்​வித் தகு​தி​யாக முதுகலை பட்​டம் மற்​றும் வெப்​டிசைனர் முடித்​திருப்​ப​தாக குறிப்​பிட்​டுள்​ளார். குறுக்கு விசா​ரணை​யில் மாதம் ரூ.36,000 சம்​பா​திப்​ப​தாக ஒப்​புக்​கொண்​டுள்​ளார். வேறு எந்​தப் பொறுப்​பும் இல்​லாத மனை​விக்கு இந்த தொகை சொற்​ப​மானது என கூற முடி​யாது; அதே சமயம், மனு​தா​ரருக்கு தனது வயதான பெற்​றோரை பராமரிக்​கும் பொறுப்​பும் மற்ற சமூக கடமை​களும் உள்​ளன.

அந்​தப் பெண் சம்​பா​திப்​பவர் என்​ப​தா​லும், தன்​னைத் தானே பராமரித்​துக் கொள்​ளும் திறன் கொண்​ட​வர் என்​ப​தா​லும் தனது கணவரிட​மிருந்து ஜீவ​னாம்​சம் பெறத் தகு​தி​யற்​றவர் ஆகிறார். மேலும் உண்​மைக்கு மதிப்​பளிக்​காத மற்​றும் முக்​கிய உண்​மை​களை மறைப்​பவர்​களின் வழக்​கு​கள் நீதி​மன்​றத்​தில் தள்​ளு​படி செய்​யப்பட வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி தனது தீர்ப்​பில்​ கூறி​யுள்​ளார்​.

சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம்: குடும்ப நல நீதிமன்ற உத்தரவு ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்
“நக்சலிசத்தால் பயனில்லை; அமைதியே வளர்ச்சிக்கு வழி” - மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in