

மும்பை: ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் நீர் நிலைகளில் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும், சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன. இதனால் இந்த வகை மீன்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் உஜானி அணை அருகேயுள்ள நீர்த்தேக்கத்தில் 2.4 டன் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் சட்டவிரோதமாக வளர்க்கப்படுவதாக மீன்வளத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மீன்வளத்துறையின் உதவி ஆணையர் அர்ச்சனா ஷிண்டே தலைமையிலான குழு சோதனை கடத்தி அந்த மீன்களை கைப்பற்றி அழித்தனர்.
இந்த மீன்கள் வளர்க்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற பரிசோதனையும் நடத்தப்பட்டது. அந்த மீன்களை வளர்க்க வேண்டாம் என விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.