23 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய டெல்லி ரவுடி ஹர்சிம்ரன் தாய்லாந்தில் கைது

23 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய டெல்லி ரவுடி ஹர்சிம்ரன் தாய்லாந்தில் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யின் கிழக்கு ஷாலிமர் பாக் பகு​தியைச் சேர்ந்​தவர் ஹர்​சிம்​ரன் (38). அவர் மீது கொலை, கொலை முயற்​சி, ஆள்​கடத்​தல், ஆயுத கடத்​தல் உட்பட 23 கிரிமினல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இந்த சூழலில் கடந்த ஜனவரி​யில் ஹர்​சிம்​ரன் வெளி​நாட்​டுக்கு தப்​பிச் சென்​றார்.

டெல்லி சிறப்பு பிரிவு போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், ராஜேஷ் சிங் என்ற போலி பாஸ்​போர்ட்​டில் தாய்​லாந்து நாட்​டுக்கு ஹர்​சிம்​ரன் தப்​பிச் சென்​றிருப்​ப​து தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து மத்​திய வெளி​யுறவுத் துறை​யின் வேண்​டு​கோளை ஏற்று தாய்​லாந்து போலீ​ஸார் அண்​மை​யில் ஹர்​சிம்​ரனை பாங்காக்​கில் கைது செய்​தனர். கடந்த 26-ம் தேதி அவர் டெல்​லிக்கு திருப்பி அனுப்​பப்​பட்​டார்.

இதுகுறித்து டெல்லி போலீ​ஸார் கூறிய​தாவது: இந்​திய வம்​சாவளியை சேர்ந்த கோல்டி தில்​லான், கனடா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் கொலை, கொள்​ளை, ஆயுத கடத்​தலில் ஈடு​பட்டு வரு​கிறார். அவரது உதவி​யுடன் ஹர்​சிம்​ரன் இந்​தி​யா​வில் இருந்து தப்பி துபாய் சென்​றுள்​ளார். அங்​கிருந்து தாய்​லாந்து தலைநகர் பாங்​காக் சென்​றுள்​ளார்.

அங்​கிருந்து ஐரோப்பா அல்​லது அமெரிக்கா​வுக்கு தப்​பிச் செல்ல திட்​ட​மிட்டு இருந்​தார். இந்​திய உளவுத் துறை​யின் தகவலால் பாங்​காக்​கில் ஹர்​சிம்​ரன் கைது செய்​யப்​பட்டு இந்​தி​யா​வுக்கு கொண்டு வரப்​பட்டு உள்​ளார். அவரிடம் தீவிர வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு போலீ​ஸார்​ தெரி​வித்​துள்​ளனர்​.

23 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய டெல்லி ரவுடி ஹர்சிம்ரன் தாய்லாந்தில் கைது
இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயல்: 123 பேர் பலி; அவசர நிலை பிரகடனம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in