சிவசேனா கூட்டத்தை புறக்கணித்த 6 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை: சபாநாயகரிடம் கோரிக்கை வைக்க முடிவு

சிவசேனா கட்சி (உத்​தவ்) கொறடா அர்​விந்த் சாவந்த்

சிவசேனா கட்சி (உத்​தவ்) கொறடா அர்​விந்த் சாவந்த்

Updated on
1 min read

புதுடெல்லி: ம​கா​ராஷ்டி​ரா​வில் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யின் மக்​களவை எம்​.பி.க்​கள் கூட்டத்தை 6 பேர் புறக்​கணித்​துள்​ளனர். இதையடுத்து அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி மக்​களவை சபா​நாயகருக்கு கடிதம் அனுப்​பப் போவ​தாக கட்​சிக் கொறடா தெரி​வித்​துள்​ளார்.

மகா​ராஷ்டி​ரா​வில் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யின் மக்​களவை எம்​.பி.க்​களில் 7 பேர் துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே தலை​மையி​லான சிவசேனா கட்சியில் இணை​ய​விருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி வந்​தன.

இந்​நிலை​யில், டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற சிவசேனா (உத்தவ்) கட்​சி​யின் முக்​கியக் கூட்​டத்​தில் கட்சி எம்​.பி.க்​கள் அனை​வரும் தவறாமல் பங்​கேற்க வேண்​டுமென கட்சி கொறடா உத்​தரவு பிறப்​பித்​திருந்​தார். ஆனால், கட்​சி​யில் மொத்​த​முள்ள 9 மக்​களவை உறுப்​பினர்​களில் 3 பேர் மட்​டுமே கூட்​டத்​தில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கூட்​டத்​தில் பங்​கேற்​காத காரணத்​துக்கு விளக்​கம் கேட்டு கட்​சி​யின் கொறடா முறைப்​படி நோட்​டீஸ் அனுப்​ப உள்ளார்.

கூட்​டத்​தில் பங்​கேற்காத 6 பேரை​யும் எம்​.பி. பதவியி​லிருந்து தகுதி நீக்​கம் செய்யுமாறு மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதவுள்​ளோம் என்று மக்​களவை சிவசேனா கட்சி (உத்​தவ்) கொறடா அர்​விந்த் சாவந்த் தெரி​வித்​துள்​ளார். உத்தவ் தாக்​கரே தலை​மை​யில் செயல்​பட்டு வந்த சிவசே​னா கட்சி, கடந்​த 2022-ல்​ இரண்​​டாக பிளவுபட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p><em>சிவசேனா கட்சி (உத்​தவ்) கொறடா அர்​விந்த் சாவந்த்</em></p></div>
போதையை ஒழிக்க அனைத்து மாவட்டங்களிலும் ‘போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படை’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in