டெல்லி சம்பவம்: காதல் முறிவால் கொலை; முதற்கட்ட விசாரணையில் இளைஞர் தகவல்

சிசிடிவி காட்சி, கைதான நபர் (வலது)
சிசிடிவி காட்சி, கைதான நபர் (வலது)
Updated on
1 min read

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவரை படுகொலை செய்த இளைஞர், தங்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டதாலேயே கொலை செய்ததாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியீல் கடந்த 28 ஆம் தேதி இரவு பலரது முன்னிலையில் 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் ஷாஹில் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நிக்கியும், ஷாஹிலும் பழகிவந்துள்ளனர். இருப்பினும் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் வருவதுண்டு. சமீப நாட்களாக நிக்கி முற்றிலுமாக ஷாஹிலை தவிர்த்துள்ளார். அவருடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை இது தொடர்பாக இருவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வாக்குவாதங்கள் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஷாஹில் ஞாயிறு (மே 29) இரவு நிக்கியை படுகொலை செய்துள்ளார்.

மேலும் போலீஸார் கூறுகையில், நிக்கியின் கையில் பிரவீன் என்று டாட்டூ போடப்பட்டிருந்தது. அந்த டாட்டூ கூட கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறியுள்ளனர்.

ஷாஹில் ஏசி மற்றும் ஃப்ரிட்ஜ் ரிப்பேர் செய்பவராவார். கொலைக்குப் பின்னர் இவர் உத்தரப் பிரதேசத்துக்கு சென்றுவிட. அங்கிருந்து அவரது அத்தை ஷாஹிலின் தந்தைக்கு போன் செய்ய அதன்மூலம் அவரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in