மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ தளபதி ஆய்வு

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ தளபதி ஆய்வு
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மேதேயி சமூகத்தின ருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மணிப்பூரில் 3 வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறையும் பதற்றமும் நீடித்தது. இந்நிலையில் மணிப்பூரில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக 2 நாள் பயணமாக ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று இம்பால் வந்தார். பல்வேறு மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள கமாண்டர்களுடன் கலந்துரையாடினார். மேலும் சிவில் சமூகத்தினருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

மனோஜ் பாண்டே இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கே, முதல்வர் பிரேன் சிங்கை சந்திக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in