Published : 27 Apr 2023 07:12 AM
Last Updated : 27 Apr 2023 07:12 AM

மன் கி பாத் 100-வது நிகழ்ச்சியையொட்டி மாநாடு: பிரதமர் மோடிக்கு நடிகர் ஆமிர் கான் பாராட்டு

ஆமிர் கான், பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: வானொலி வாயிலாக ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.

இதையொட்டி டெல்லியில், ‘மன் கி பாத்-100' என்ற மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நடிகை ரவீணா டாண்டன், விளையாட்டு வீராங்கனைகள் தீபா மாலிக், நிகத் ஜரீன், பத்திரிகையாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்நிகழ்ச்சியின்போது நடிகர் ஆமிர் கான் கூறியதாவது: நாட்டின் தலைவர் மக்களுடன் உரையாடுவது, பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, யோசனைகளை முன்வைப்பது, ஆலோசனைகளை வழங்குவது என்பது மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி 100-வது அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளதில் மகிழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்வேகம் அளித்து வருகிறார். இவ்வாறு நடிகர் ஆமிர்கான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x