அதிகரிக்கும் தொற்று | தினசரி கோவிட் பாதிப்பு 6,000-ஐ கடந்தது: நேற்றைவிட 13 சதவீதம் அதிகம்

அதிகரிக்கும் தொற்று | தினசரி கோவிட் பாதிப்பு 6,000-ஐ கடந்தது: நேற்றைவிட 13 சதவீதம் அதிகம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் புதிதாக 6,050 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28,303 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 6,050 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 28,303 ஆக உயர்ந்துள்ளது. அன்றாட பாதிப்பு முந்தைய நாள் (புதன்கிழமை) ஏற்பட்ட 5,335 பாதிப்பைவிட 13 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 85 ஆயிரத்து 858 ஆக உள்ளது.

கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 3 பேர், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் 2 பேர், டெல்லி, குஜராத் ஹரியாணா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in