இந்தியாவில் புதிதாக 3,038 பேருக்கு கோவிட் தொற்று: 9 பேர் பலி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் புதிதாக 3,038 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,179 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் 3,038 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 21,179 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் அன்றாட பாதிப்பு முந்தைய நாள் (ஞாயிறு) ஏற்பட்ட 3,641 பாதிப்பைவிட சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 29 ஆயிரத்து 284 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 2,609 பேர் குணமடைந்துள்ளனர்.

கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in