எஸ்.பி. தியாகி வெளிநாடு செல்ல தடை

எஸ்.பி. தியாகி வெளிநாடு செல்ல தடை
Updated on
1 min read

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விவிஐபிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் தியாகி உள்ளிட்ட மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் தற்போது ஜாமீனில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.தியாகி இந்தோனேசியா செல்ல விசா ரணை நீதிமன்றம் கடந்த 24 ம் தேதி அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி ஐ.எஸ். மேத்தா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜூலை 12 வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in