மகளிர் ஆணையத் தலைவிக்கு பாலியல் துன்புறுத்தல் - கார் டிரைவர் கைது

மகளிர் ஆணையத் தலைவிக்கு பாலியல் துன்புறுத்தல் - கார் டிரைவர் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால்.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது; டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, போதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். காரில் தப்பிக்க முயன்ற அவரை பிடிக்க முற்பட்டபோது எனது கை அந்த காரின் ஜன்னல் கதவில்மாட்டிக் கொண்டது.

இதையடுத்து,காருடன் 10-15 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.மகளிர் ஆணையத் தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற பெண்கள் எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்பதை கற்பனை செய்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இவரது புகாரின் அடிப்படையில் கார் டிரைவர் ஹரிஷ் சந்திரா கைது செய்யப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in