மேற்கு வங்க முதல்கட்ட தேர்தலில் 92.03% வாக்குப் பதிவு

மேற்கு வங்க முதல்கட்ட தேர்தலில் 92.03% வாக்குப் பதிவு
Updated on
2 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்க முதல் கட்ட தேர்​தலில் 92.03 சதவீத வாக்​கு​கள் பதி​வாகி உள்​ளன.

மேற்கு வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. இந்த தொகு​தி​களுக்கு ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாகத் தேர்​தல் நடத்​தப்​படும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

இந்​தச் சூழலில் முதல் கட்​ட​மாக 152 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர்.

3.60 கோடி பேர் வாக்​குரிமை பெற்று உள்​ளனர். அவர்​களுக்​காக 44,376 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. காலை 7 மணிக்கு வாக்​குப்​ப​திவு தொடங்​கியது. அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் காலை முதலே பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து வாக்​குரிமையை செலுத்​தினர்.

மேற்கு வங்​கத்​தின் அசன்​சோல் தக்​சின் தொகு​தி​யில் நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இந்த தொகு​தி​யின் பாஜக எம்​எல்​ஏ.​வாக அக்​னிமித்ரா பால் பதவி வகிக்​கிறார். தற்​போதைய தேர்​தலில் பாஜக சார்​பில் அவரே மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். அவரை எதிர்த்து திரிண​மூல் சார்​பில் தபஸ் பானர்ஜி களமிறங்கி உள்​ளார்.

இந்​தச் சூழலில் அசன்​சோல் தொகு​தி​யின் ஹர்​மத் நகர் பகு​தி​யில் பாஜக எம்​எல்ஏ அக்​னிமித்ரா பால் நேற்று காரில் சென்று கொண்​டிருந்​தார். அவரது காரை குறி​வைத்து கற்​கள் வீசப்​பட்​டன. இதில் காரின் கண்​ணாடிகள் உடைந்​தன. இதுதொடர்​பாக உள்​ளூர் போலீஸ் நிலை​யத்​தில் அவர் புகார் அளித்​துள்​ளார். மால்​டா​வில் உள்ள வாக்​குச்​சாவடி மையத்​தில் பாஜக ஏஜென்ட் ஒரு​வர் தாக்கப்பட்டார்.

அவரது கார் சேதப்​படுத்​தப்​பட்​டது. படு​காயமடைந்த பாஜக ஏஜென்ட் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இதே​போல பதாஸ்​பூர் வாக்​குச்​சாவடி​யில் பிரான்​கிருஷ்ணா சாகு என்ற பாஜக ஏஜென்ட் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. நாராயண்​கர் தொகு​திக்கு உட்​பட்ட பாசிம் மேதினிபூரில் உள்ள வாக்​குச்​சாவடி​யில் ஒரு வாக்​காள​ருக்​கும் வாக்​குச்​சாவடி பெண் அதி​காரிக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. ஆத்​திரமடைந்த வாக்​காளர், பெண் அதி​காரியை சரமாரி​யாக தாக்​கி​னார்.

வீரர்​கள் மீது கல்​வீச்சு

பிர்​பூம் மாவட்​டம், கைரோ சோல் பகுதி வாக்​குச்​சாவடி​யில் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரத்​தில் தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. இதன் காரண​மாக அந்த வாக்​குச்​சாவடியை வாக்​காளர்​கள் முற்​றுகை​யிட்​டனர். அப்​போது சிஆர்​பிஎப் போலீ​ஸாரை குறி​வைத்து சிலர் கற்​களை வீசி தாக்​குதல் நடத்​தினர். அவர்​கள் மீது போலீ​ஸார் தடியடி நடத்​தினர். இதில் சிலர் காயமடைந்​தனர்.

முதல் கட்ட வாக்​குப்​ப​திவு தொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்​திடம் நேற்று 700-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் அளிக்​கப்​பட்​டன. வன்​முறை சம்​பவங்​கள், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் தொடர்​பாக இந்த புகார்​கள் அளிக்​கப்​பட்​டன. வாக்​காளர்​களைத் தாக்​கியது, கட்சி சார்​பில் அமைக்​கப்​பட்ட பந்​தல்​களை உடைத்​தது தொடர்​பாக சிஆர்​பிஎப் போலீ​ஸார் மீது புகார் மனுக்​கள் அளிக்​கப்​பட்டு உள்​ளன.

முதல்கட்ட தேர்தலில் 92.03 சதவீத வாக்குகள் பதிவாகி யுள்ளன. வரும் 29-ம் தேதி மீத​முள்ள 142 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. மேற்​கு​வங்​கத்​தின்​ 2 கட்​டத்​ தேர்​தல்​களில்​ பதி​வாகும்​ வாக்​கு​கள்​ மே 4-ம்​ தேதி எண்​ணப்​பட உள்​ளன.

மேற்கு வங்க முதல்கட்ட தேர்தலில் 92.03% வாக்குப் பதிவு
“தரம் தாழ்ந்த பேச்சு” - ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in