Published : 03 Dec 2022 06:50 AM
Last Updated : 03 Dec 2022 06:50 AM

மாற்றுத்திறனாளியிடம் பிரச்சினையை கேட்ட சந்திரபாபு நாயுடு

கொவ்வூரு

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 2 - ம் நாளான நேற்று, அவர் கொவ்வூருபகுதியில் சுற்றுப் பயணம் செய்தார்.

அவரை காண மாற்று திறனாளி தொண்டர் நிவாஸ் என்பவர் வந்தார். இதனை அறிந்த சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று அவருடன் கீழே அமர்ந்து பிரச்சினைகளை கேட்டறிந்தார். சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட நிவாஸ், இத்தனை ஆண்டுகள் கொஞ்சமும் மனம் தளராமல் கட்சி பணிகளை செய்து வருகிறார். நிவாஸை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு கட்சி தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x