மாதந்தோறும் 16 லட்சம் வேலை - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

மாதந்தோறும் 16 லட்சம் வேலை - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Updated on
1 min read

அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎஃப் நிகழ்ச்சியொன்றில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: உலகம் பொருளாதார நெருக்கடியை எதிர்காெண்டபோதும், இந்தியா வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15-16 லட்சம் வேலைகள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் கொள்கைகளால் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கையும் மிக எளிதாகிவிட்டது.

“முதலும், முடிவும் எப்போதுமே தேசம்தான் பெரிது" என்ற தாரக மந்திரத்தை இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் தங்கள் கடைமையில் தேசத்தை முதன்மைப்படுத்துபவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in