Published : 22 Nov 2016 07:19 PM
Last Updated : 22 Nov 2016 07:19 PM
உத்தர பிரதேச மாநிலம் திண்ட்வாரி வங்கியில் சிகிச்சைக்காக பணம் எடுக்க வரிசையில் தந்தை காத்திருக்க, காய்ச்சல் பாதிக்கப்பட்ட 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் அதிச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தர்மேந்திர வர்மா என்ற தொழிலாளி அலகாபாத் உ.பி. கிராமின் வங்கியில் தன் மகள் சிகிச்சைக்காக தினமும் வந்து பணம் எடுத்துக் கொண்டிருந்தார். இவரது 4 வயது மகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் திங்களன்று வங்கிக்கு பணம் எடுக்க வரும்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகளையும் உடன் அழைத்து வந்து வரிசையில் காத்திருந்தார். ஆனால் அப்போது 4 வயது சிறுமி அங்கேயே உயிரிழந்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது என்று சர்க்கிள் ஆபீசர் சதார் அஜய் குமார் என்பவர் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் கூர்ந்து நோக்கப்படுகிறது என்றார் அவர்.
இதற்கிடையே இந்த உயிரிழப்பு சம்பவத்தினால் பண்டா-பதேபூர் சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT