ஜம்மு காஷ்மீரின் உரியில் என்கவுன்ட்டர் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

உயிரிழந்த தீவிரவாதியின் உடல்
உயிரிழந்த தீவிரவாதியின் உடல்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு ராணுவத்தினரும், பாராமுல்லா போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கமல்கோட் என்ற இடத்துக்கு அருகே 3 தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர்.

அவர்கள் மீது ராணுவத்தினரும், பாராமுல்லா போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இங்கு கடந்த 72 மணி நேரத்தில் போதை பொருள் கடத்தல் முயற்சியும் நடந்தது. அதையும் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in