டிஜிட்டல் கைது மிரட்டல்: மும்பையில் ரூ.9 கோடியை இழந்த 85 வயது முதியவர்

டிஜிட்டல் கைது மிரட்டல்: மும்பையில் ரூ.9 கோடியை இழந்த 85 வயது முதியவர்
Updated on
1 min read

மும்பை: டிஜிட்​டல் கைது என்று கூறி மும்​பையைச் சேர்ந்த 85 வயது முதி​யவரிடம் ரூ.9 கோடியை பறித்த கும்​பல் தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்றனர்.

மும்​பை​யின் தாக்​குர்ட்​வார் பகு​தி​யில் வசித்து வரு​கிறார் 85 வயது முதி​ய​வர் ஒரு​வர். இவரது மகள் அமெரிக்​கா​வில் வசிக்​கிறார். கடந்த நவம்​பர் 28-ம் தேதி செல்​போனில் முதி​ய​வருக்கு ஒரு அழைப்பு வந்​துள்​ளது. அதில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்​றும், நாசிக்​கில் அமைந்​துள்ள பஞ்​சவடி போலீஸ் நிலை​யத்​தைச் சேர்ந்த போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் என்​றும் அறி​முக​மாகி​யுள்​ளார். அப்​போது அவர் கூறும்​போது அந்த முதி​ய​வர் பேரில் ஆதார் அட்டை எண்​ணைக் கொண்டு வங்​கிக் கணக்கு தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், அதில் இருந்து தடை செய்​யப்​பட்ட இயக்​க​மான பாப்​புலர் பிரண்ட் ஆஃப் இந்​தியா அமைப்​புக்கு ஏராள​மான பணம் அனுப்​பி​யுள்​ள​தாக​வும் அவர் புகார் தெரி​வித்​தார். விசா​ரணைக்கு ஒத்​துழைத்​தால், உண்​மை​யான குற்​ற​வாளி​களை கண்​டு​பிடித்து விடலாம் என்ற ரீதி​யில் பேசி​யுள்​ளார்.

தற்​போது முதி​ய​வரை டிஜிட்​டல் கைது செய்​துள்​ள​தாக​வும், இதை யாரிட​மும் தெரிவிக்க வேண்​டாம் என்​றும் அந்த நபர் கூறி​யுள்​ளார். இதையடுத்து பயந்து போன அந்த முதி​ய​வர் தனது வங்​கிக் கணக்கு விவரங்​கள், இருப்பு விவரங்​கள், பங்​குச்​சந்தை முதலீடு, மியூச்​சுவல் பண்ட் முதலீடு, நிரந்தர வைப்பு முதலீட்டு விவரங்​களை தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து அந்த மர்ம நபர்​கள் உச்ச நீதி​மன்​றம், ஆர்​பிஐ பெயரில் போலி​யான ஆவணங்​களை அனுப்பி அவரை மிரட்​டி​யுள்​ளனர். இந்த வழக்​கி​லிருந்து விடு​தலை பெற வேண்​டும் என்​றால், முதலீடு செய்த பணத்தை தங்​களுக்​குத் தந்​து​விட​வேண்​டும் என்று மிரட்​டி​யுள்​ளனர். அந்த தொகை அனைத்​தை​யும் நீதி​மன்​றத்​தில் டெபாசிட் செய்​ய​வேண்​டும் என்​றும் விசா​ரணை முடிந்த பின்​னர் பணம் திருப்​பித் தரப்​படும் என்​றும் அவர்​கள் கூறி​யுள்​ளனர்.

இதையடுத்து ரூ.9 கோடி பணத்தை ஆர்​டிஜிஎஸ் மூல​மாக அந்த முதி​ய​வர் கடந்த டிசம்​பர் 17-ம் தேதி அனுப்​பி​யுள்​ளார். இந்​நிலை​யில் கடந்த 22-ம் தேதி, மேலும் ரூ.3 கோடியை அனுப்​பவேண்​டும் என்று மர்ம நபர்​கள் தெரி​வித்​துள்​ளனர். இதையடுத்து கிர்​காவ்ன் பகு​தி​யிலுள்ள பாங்க் ஆஃப் இந்​தியா கிளைக்கு முதி​ய​வர் சென்​றுள்​ளார். அப்​போது, சந்​தேகம் அடைந்த வங்கி ஊழியர்​கள் அந்​தப் பணத்தை அனுப்​புவதை நிறுத்​தி, அவரின் உறவினர்​களிடம் பேசு​மாறு கூறி​யுள்​ளனர். அப்​போது தான் ஏமாற்​றப்​பட்​டதை அவர் உணர்ந்​துள்​ளார்.

இதையடுத்து அவர் சைபர்​கிரைம் ஹெல்ப்​லைன் எண்​ணான 1930-ல் புகார் செய்​துள்​ளார். இதையடுத்து சைபர்​கிரைம்​ போலீ​ஸார்​ வழக்​குப்​ பதிவு செய்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

டிஜிட்டல் கைது மிரட்டல்: மும்பையில் ரூ.9 கோடியை இழந்த 85 வயது முதியவர்
பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in