Published : 11 Aug 2022 05:55 AM
Last Updated : 11 Aug 2022 05:55 AM

தமிழ்நாட்டுக்கு ரூ.4,758 கோடி வரிப் பகிர்வு விடுவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்ந்தளிப்புத் தொகையில் தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நேற்று அதன் தொகுப்பிலிருந்து வரி பகிர்ந்தளிப்பாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1.16 லட்சம் கோடியை விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்ட நிதி ரூ.4,758 கோடி ஆகும்.

மத்திய அரசு ரூ.58,332 கோடியைத்தான் வரி பகிர்ந்தளிப்பாக விடுவிக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இரண்டு தவணைகளையும் சேர்ந்து ஒரே நேரத்தில் விடுவித்துள்ளது.

நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரிப் பகிர்வு தீர்மானிக்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்கள் முதலீடுகள் மற்றும் செலவினங்களை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த வரிப் பகிர்ந்தளிப்பு வழங்கப்படுகிறது.

உ.பி.க்கு அதிக தொகை

அதிகபட்சமாக உத்தர பிரதேசதுக்கு ரூ.20,928 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பிஹாருக்கு ரூ.11,734 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்துக்கு ரூ.9,158 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.8,776 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.7,369 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x