Published : 04 Jul 2022 08:01 AM
Last Updated : 04 Jul 2022 08:01 AM

கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் பாதியாக குறைந்தது

புதுடெல்லி: சென்ற நிதி ஆண்டில் வங்கி மோசடிகள் பாதியாகக் குறைந்துள்ளன. 2020-21 நிதி ஆண்டில் வங்கிகளில் பதிவான மோசடித் தொகை ரூ.1.05 லட்சம் கோடி யாக இருந்தது. 2021-22 நிதி ஆண்டில் பதிவான மோசடித் தொகை ரூ.41,000 கோடி ஆகும்.

குறிப்பாக ரூ.100 கோடிக்கு மேலான மோசடி வழக்குகளின் எண்ணிக்கை சென்ற நிதி ஆண்டில் பாதியாகக் குறைந்துள்ளது. 2020-21 நிதி ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேலான மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 265 ஆக இருந்தது. 2021-22-ல் அது 118 ஆக குறைந்துள்ளது.

பொதுத் துறை வங்கிகளில் ரூ.100 கோடிக்கு மேலான மோச டிகளின் எண்ணிக்கை 167-ல் இருந்து 80 ஆக குறைந்துள்ளது. 2020-21-ல் பதிவான மோசடித் தொகை ரூ.65,900 கோடி, சென்ற ஆண்டில் ரூ.28,000 கோடியாக குறைந்துள்ளது. -பிடிஐ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x