ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் 8 பேர் கைது - அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜினாமா

ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் 8 பேர் கைது - அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜினாமா
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு புகார்​களை மாநில அரசு அமைத்​துள்ள சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்​ஐடி) உறுதி செய்​துள்​ளது.

அதன் அடிப்​படை​யில், பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு கோயில் அறக்​கட்​டளை ஊழியர்​கள் 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் அறக்​கட்​டளை பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராயின் முன்​னாள் வாகன ஓட்​டுநர் டின்னு (எ) ராம் ஷங்​கர் யாதவ், அறக்​கட்​டளை ஊழியர் அனுகல்ப் மிஸ்​ரா, அவரது மைத்​துனர் லவ்​குஷ் மிஸ்​ரா, டின்​னு​வின் மரு​மகன் மனிஷ் யாதவ், கருணேஷ் பாண்​டே, ராம் ஷங்​கர் மிஸ்​ரா, அவினாஷ் சுக்லா மற்​றும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சுபாஷ் ஸ்ரீவஸ்​தவா ஆகியோர் அயோத்​தி​யில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 பேர் மீதும் வழக்​கு: இவர்​களில் காணிக்கை எண்​ணும் பணி முழு​வதை​யும் நிர்​வகித்த டின்னு முக்​கியக் குற்​ற​வாளி​யாக வழக்குப் பதி​வாகி உள்​ளது. கோடிக்​கணக்​கான ரூபாய் திருடி, அயோத்தி மற்​றும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களில் சொத்​துகள் வாங்​கிய​தாக இவர் மீது குற்​றம் சுமத்​தப்​பட்​டுள்​ளது. இவருக்கு உதவி​யாக இருந்​த​தாக காணிக்கை எண்​ணும் பணி​யில் இருந்த மற்ற 7 பேர் மீதும் வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன.

இதில், லவ்​குஷ் மிஸ்ரா வீட்​டிலிருந்து ரூ.12 லட்​சம், மணிஷ் குமார் யாத​விடம் இருந்து ரூ.36 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. கைது செய்​யப்​பட்ட 8 பேரும் நேற்று அயோத்தி மாவட்ட செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு பின்​னர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

அறக்​கட்​டளை​யின் மற்​றொரு முக்​கிய நிர்​வாகி கிருஷ்ண மோஹன் அளித்த புகாரின் அடிப்​படை​யில் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவர், உ.பி.​யின் ஹர்​தோயைச் சேர்ந்த, இந்திய வனப் பணி​யின் மகா​ராஷ்டிரப் பிரி​வில் பணியாற்றியவர். இவர் நாக்​பூரில் வசித்த போது ராஷ்ட்​ரிய ஸ்வயம் சேவக் சங்கத்​தில் இணைந்து பல பொறுப்​பு​களை வகித்​தவர். கடந்த 2012-ல் பணி ஓய்வு பெற்ற பிறகு, சமூக சேவை​யில் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கிறார்.

இந்​நிலை​யில், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்​கட்​டளை பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய் மற்​றும் முக்​கிய நிர்​வாகி கோபால் ரான் ஆகியோர் பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளனர். எஸ்​ஐடி விசா​ரணை நடுநிலை​யாக நடை​பெறு​வதற்​காக இவர்​கள் ராஜி​னாமா செய்​த​தாகக் கூறப்​படு​கிறது. எஸ்​ஐடி இடைக்​கால அறிக்​கை​யில், ராமர் கோயில் காணிக்​கை​யில் கடந்த ஏப்​ரல் 27 முதல் ஜூன் 5 வரை 70 பெரிய திருட்​டு​கள் நடந்​திருப்​ப​தாகக் கூறப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடை​யில், ஆம் ஆத்மி மாநிலங்​களவை எம்​.பி. சஞ்​சய் சிங், கோயில் நிலத்​தி​லும் ஊழல் நடந்​துள்​ளது என்று புகார் கூறியுள்ளார். இதற்​கான ஆதா​ரங்​களை எஸ்​ஐடி​யிடம் சஞ்​சய் சிங் அளித்​துள்​ளார். இதனால் மேலும் பலர்​ கைது செய்யப்படுவார்கள்​ என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் 8 பேர் கைது - அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜினாமா
ஜூலை 1-ல் அதிமுக மகளிரணி ஆலோசனை: பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in