Last Updated : 24 Mar, 2022 07:55 AM

 

Published : 24 Mar 2022 07:55 AM
Last Updated : 24 Mar 2022 07:55 AM

மணிப்பூர் அரசு அலுவலகங்களுக்கு வாரத்தில் 5 நாள் மட்டும் பணி

இம்பால்: மணிப்பூர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று முதல்வராக பிரேன் சிங் மீண்டும் பொறுப்பேற்ற நிலையில், அமைச்சரவையின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

இதில் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் சனி, ஞாயிறு ஆகிய2 நாட்கள் விடுமுறை என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசுஅலுவலகங்கள் 5 நாள் மட்டுமே செயல்படும் என்ற அறிவிப்பால் அரசு ஊழியர்களின் பணி மற்றும்உற்பத்தித் திறன் மேம்படும். 2 நாள்விடுமுறையில் அவர்கள் தங்களை புதுப் பித்துக் கொள்ளவும் உதவும். அலுவலக நேரம் காலை 9 மணிக்கே தொடங்கும். வீட்டு நிர்வகம் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு பள்ளிகளில் வகுப்புகள் காலை 8 மணிக்கே தொடங்கும். மதிய நேரங்களில் பள்ளி மாணவர்கள் வீடுகளில் பாடத்தை பயில நேரம் கிடைக்கும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x