Published : 17 Sep 2021 02:30 PM
Last Updated : 17 Sep 2021 02:30 PM

கோவிட் தடுப்பூசி: 77.24 கோடியைக் கடந்தது

புதுடெல்லி

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 77.24 கோடியைக் கடந்தது.

இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 77.24 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 63,97,972 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்டத் தகவலின்படி, மொத்தம் 77,78,319 முகாம்களில் 77,24,25,744 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 37,950 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,25,98,424 ஆக உயர்ந்துள்ளது.

நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம், 97.65 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 82 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,39,056 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.02 சதவீதம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 15,27,420 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 54,92,29,149 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று உறுதி விகிதம் தொடர்ந்து 84 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 1.97 சதவீதமாகவும், தினசரித் தொற்று உறுதி விகிதம் 2.25 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 18 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 101 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் காணப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x