இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி: ஐஎம்​எப் கீதா கோபி​நாத் கணிப்பு

இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி: ஐஎம்​எப் கீதா கோபி​நாத் கணிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் குறித்து சர்​வ​தேச நாணய நிதி​யத்​தின் (ஐஎம்​எப்) முன்​னாள் துணை நிர்​வாக இயக்​குநர் கீதா கோபி​நாத் கூறிய​தாவது:

தேசிய புள்​ளி​யியல் அலு​வல​கம் (என்​எஸ்ஓ) ஜூலை-செப்​டம்​பர் காலாண்​டுக்​கான பொருளா​தார வளர்ச்சி விகிதத்தை 8.2 சதவீத​மாக கணித்​திருந்​தது. ஆனால், அதற்கு முன்​ன​தாகவே இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்​கான கணிப்பை ஐஎம்​எப் வெளி​யிட்​டு​விட்​டது. நடப்பு நிதி​யாண்​டைப் பொருத்​தவரை​யில் இந்​தி​யா​வின் வளர்ச்சி 7 சதவீத​மாக இருக்​கும். இது, அக்​டோபரில் ஐஎம்​எப் கணித்த 6.6 சதவீதத்தை விட அதி​கம்.

இந்​தி​யா​வால் 20 ஆண்​டு​களுக்கு 8 சதவீதத்​திற்கு நெருக்​க​மான வளர்ச்​சியை தக்​க​வைத்​துக் கொள்ள முடிந்​தால் 2047 இலக்​கு​களை அடைய​முடி​யும். ஆனால், 20 ஆண்டு காலத்​திற்கு தொடர்ச்​சி​யாக 8 சதவீத வளர்ச்​சி​யைத் தக்​க​வைத்​துக்​கொள்​வது அவ்​வளவு எளி​தானது அல்ல. அதற்​குத் தொடர்ச்​சி​யான சீர்​திருத்​தங்​கள் தேவைப்​படும். இவ்​வாறு கீதா கோபி​நாத்​ கூறி​னார்​.

இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி: ஐஎம்​எப் கீதா கோபி​நாத் கணிப்பு
டாக்காவில் இந்திய தூதரகத்துக்கு அச்சுறுத்தல்: வங்கதேச தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in