மால்டாவில் நீதித்துறை அதிகாரிகள் சிறைவைப்பு: சிபிஐ, என்ஐஏ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

சம்பவம் பற்றி தெரியாது என மம்தா கைவிரிப்பு
மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, பைஸ்னாப் நகர் தொகுதி வேட்பாளர் சந்தானா சர்காரை ஆதரித்து பேசினார். படம்: பிடிஐ

மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, பைஸ்னாப் நகர் தொகுதி வேட்பாளர் சந்தானா சர்காரை ஆதரித்து பேசினார். படம்: பிடிஐ

Updated on
1 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்​கத்​தின் மால்டா மாவட்​டத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்​கை​யின் (எஸ்ஐஆர்) போது வாக்​காளர் பெயர்​கள் நீக்​கப்​பட்​டது தொடர்​பாக புகார் எழுந்​தது. இது குறித்து ஆய்வு செய்​வதற்​காக உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பணி​யில் அமர்த்​தப்​பட்ட நீதித்​துறை அதி​காரி​கள் மால்டா மாவட்​டம் கலி​யாசக் வட்​டார வளர்ச்சி அலு​வல​கத்​துக்கு நேற்று முன்​தினம் சென்​றனர்.

அங்கு நேற்றுமுன்தினம் குவிந்திருந்த போராட்​டக்​காரர்​கள், வட்​டார வளர்ச்சி அலு​வல​கத்​தைச் சூழ்ந்து கொண்டு அங்​கிருந்த 3 பெண் அதி​காரி​கள் உட்பட 7 அதி​காரி​களை சிறை வைத்​தனர். 9 மணி நேரத்​துக்​குப்​பிறகு அங்கு போலீ​ஸார் சென்​று, போராட்​டக்​காரர்​கள் மீது தடியடி நடத்தி சிறைவைக்​கப்​பட்ட அதி​காரி​களை நேற்று அதிகாலை 1 மணி​யள​வில் மீட்​டனர்.

உச்ச நீதி​மன்​றம் கண்​டனம்: இந்த விவ​காரம் குறித்து உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த தலை​மையி​லான அமர்வு நேற்று கூறிய​தாவது: மாவட்ட நீதிப​தி​களை மிரட்​டியது திட்​ட​மி்ட்டு அரங்கேற்​றிய செயல்.

மாவட்ட ஆட்​சி​யர் அங்கு இல்​லை. மேற்கு வங்​கத்​தில் அனை​வரும் அரசி​யல் மொழி​யில் பேசுகின்​றனர். இந்த விவ​காரத்​தில் தொடர்​புடைய கயவர்​கள் யார் என்​பது தெரி​யாது என்று நினைக்​கிறீர்​களா? நள்​ளிரவு 2 மணி வரை இச்​சம்​பவத்தை கண்​காணித்​தோம்.

இந்த விவ​காரத்​தைச் சிபிஐ அல்​லது தேசிய புல​னாய்வு முகமை​யிடம் (என்ஐஏ) தேர்​தல் ஆணை​யம் ஒப்​படைக்க வேண்​டும். இது தொடர்​பான விசா​ரணை​யின் அறிக்​கையை உச்​சநீ​தி​மன்​றத்​தில் விசா​ரிக்​கும் அமைப்பு தாக்​கல் செய்ய வேண்​டும்.

இந்த விவ​காரத்​தில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்​பதை விளக்​கும் வகை​யில் மேற்கு வங்க தலை​மைச் செயலர், டிஜிபி, மால்டா மாவட்ட ஆட்​சி​யர், எஸ்​எஸ்பி உள்​ளிட்​டோர் ஆன்​லைனில் ஏப்​ரல் 6-ஆம் தேதி ஆஜராக வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

இதுகுறித்து சகர்​திகி பகு​தி​யில் நடந்த பொதுக்​கூட்​டத்​தில் முதல்​வர் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘மால்​டா​வில் நீதித்​துறை அதி​காரி​களை சிறைபிடித்​தவர்​கள் யார் என எனக்​குத் தெரி​யாது. இச்​சம்​பவம் குறித்து எனக்​கும் யாரும் தகவல் தெரிவிக்​க​வில்​லை.

அதி​காரம், சட்​டம் ஒழுங்கு அனைத்​தை​யும் என்​னிடம் இருந்து மத்​திய அரசு எடுத்​து​விட்​டது. மால்டா சம்​பவம் சதி திட்​டத்தை தயாரித்​தது அமைச்​சர் அமித் ஷா. மேற்​கு​வங்​கத்​தில் தோல்வி ஏற்​படும் என்​ப​தால், தேர்​தலை ரத்து செய்​து​விட்டு குடியரசுத் தலை​வர் ஆட்​சியை அமல்​படுத்த பாஜக விரும்​பு​கிறது’’ என்றார். இதற்கிடையில் என்ஐஏ விசாரிக்க வேண்டுமென்று தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

<div class="paragraphs"><p>மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, பைஸ்னாப் நகர் தொகுதி வேட்பாளர் சந்தானா சர்காரை ஆதரித்து பேசினார். படம்: பிடிஐ</p></div>
தலைமை தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in