Published : 24 May 2021 09:23 AM
Last Updated : 24 May 2021 09:23 AM

15,000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன்: ரயில்வே விநியோகம்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விநியோகித்த திரவ மருத்துவ ஆக்சிஜன் அளவு 15,000 மெட்ரிக் டன்களை கடந்தது

பல தடைகளை கடந்து, பல மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே தொடர்ந்து திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்து வருகிறது. இதுவரை, இந்திய ரயில்வே, பல மாநிலங்களுக்கு 936 டேங்கர்களில், 15,284 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்துள்ளது.

இதுவரை 234 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்து, பல மாநிலங்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளது.

தற்போது 9 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 31 டேங்கர்களில் 569 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன.

அசாம் மாநிலத்துக்கு முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் இன்று காலை சென்றது.

கர்நாடகாவுக்கு, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட ஆக்சிஜன் அளவு 1000 மெட்ரிக் டன்களை கடந்து விட்டது.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒவ்வொரு நாளும், 800 மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கின்றன.

உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஹரியாணா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 14 மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக்ஸிஜனை வழங்கி நிவாரணம் அளித்துள்ளன.

தற்போது வரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப்பிரதேசத்துக்கு 3609, மத்தியப் பிரதேசத்துக்கு 566, டெல்லிக்கு 4300, ஹரியாணாவுக்கு 1759, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 1063, உத்தரகாண்டுக்கு 320, தமிழகத்துக்கு 857, ஆந்திராவுக்கு 642, பஞ்சாப்புக்கு 153, கேரளாவுக்கு 246, தெலங்கானாவுக்கு 976, அசாமுக்கு 80 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x