நைட்ரஜன் ஆலைகள் ஆக்சிஜன் ஆலைகளாக மாற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை

நைட்ரஜன் ஆலைகள் ஆக்சிஜன் ஆலைகளாக மாற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை
Updated on
1 min read

நைட்ரஜன் ஆலைகளை ஆக்சிஜன் ஆலைகளாக மாற்றுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளால் மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஆக்சிஜன் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் ஆக்சிஜன்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனிடையே, நாட்டில் உள்ள நைட்ரஜன் ஆலைகளை ஆக்சிஜன் ஆலைகளாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பான பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். பிரதமரின் முதன்மைச் செயலர், மத்திய அமைச்சரவைச் செயலர், உள்துறைச் செயலர், நெடுஞ்சாலைத் துறை செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in