

பெங்களூரு: கர்நாடகாவில் பாகல்கோட்டை, தாவணகெரே தெற்கு ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. 2 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பாகல்கோட்டையில் 65.92 சதவீதமும், தாவணகெரே தெற்கு தொகுதியில் 64.25 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. ஒட்டு மொத்தமாக இரு தொகுதிகளிலும் பெரிய அளவில் மோதல்கள் இல்லாமல், அமைதியான முறையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திரிபுரா, நாகாலாந்து: நாகாலாந்து மாநிலம் கோரிடாங் சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 80.62 சதவீத வாக்குகளும், திரிபுரா மாநிலம் தர்மா நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 79.84 சதவீத வாக்குகளும் பதிவாயின.