

மகாராஷ்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பை கட்டு்ப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில், 85.6 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு பிப்ரவரி 9-ம் தேதி வரை தினசரி பாதிப்பு என்பது சராசரியாக 2489 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்கு பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. பின்னர் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், 24,882 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14,317 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாக்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கும். கடந்த திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதனால் வரும் 15ம் தேதி முதல் 21ம் தேதிவரை நாக்பூரில் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் அங்காடிகள் மட்டுமே திறந்திருக்கும். அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் அங்காடிகள் மட்டுமே திறந்திருக்கும்.
இதனைத் தொடர்ந்து அவுரங்காபாத் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பை கட்டு்ப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று வரை 5,569 என்ற அளவில் உள்ளது. மொத்தமாக இம்மாவட்டத்தில் 57,755 கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.